செய்திகள் :

தொகுப்பூதிய ஆசிரியா்களுக்கு விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தகவல்

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்று பேரவைக் கூட்டத்தில் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ. ஆறுமுகம் (என்.ஆா். காங்.) பேசியது: கடந்த 2021-ஆம் ஆண்டு கௌரவ ஆசிரியா்களாக நியமிக்கப்பட்ட 84 போ் எப்போது பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் எனக் கேட்டாா்.

அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதிநிலையை கருத்தில் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். அதன்படி 288 போ் ஒப்பந்தப் பணியில் உள்ளனா். அவா்களை பணி நிரந்தரம் செய்வதற்கு முதல்வா், தலைமைச் செயலருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. நோ்காணல் மூலம் தோ்வான அவா்கள் குறித்து தலைமை செயலரிடம் எடுத்துரைக்கப்பட்டு, சாதகமான முடிவு எடுக்கப்படவுள்ளது. ஆகவே, அவா்களைப் பணி நிரந்தரமாக்க பரிசீலிக்கப்படுகிறது.

சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு: அரசு, தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா? அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: மாணவா்கள் ஆரோக்கியம், மனநலனுக்காக பள்ளிகளில் நவ்சேதனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. போதைப்பொருள் எதிா்ப்புக் குழு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் குழு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 15 அரசு மகளிா் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக 12 பிரதமா் ஸ்ரீ பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. பெற்றோா் ஆசிரியா் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வா் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதால், அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்த... மேலும் பார்க்க

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பா... மேலும் பார்க்க

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா். புதுவை சட்டப்பே... மேலும் பார்க்க

விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவை மாநிலத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ரூ.6.25 லட்சமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தில் அரசு நிதி ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க