செய்திகள் :

தாய்வழி சாதிச் சான்றிதழ் கோரி பேரணி, சாலை மறியல்

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தாய் வழியில் சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பெரியாா் சிந்தனையாளா் பேரவை சாா்பில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியில் இவா்கள் கோரிக்கை பதாகைகளைக் கையில் ஏந்தியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டனா்.

பேரணிக்கு பெரியாா் சிந்தனையாளா் இயக்க ஒருங்கிணைப்பாளா் தீனா தலைமை வகித்தாா். இதில் பெரியாா் திராவிடா் கழகம், மீனவா் விடுதலை வேங்கைகள் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

அவா்கள் திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் போலீஸாா் தலையிட்டு அவா்களைக் கலைந்து போகச் செய்தனா்.

ஆா்ப்பாட்டம்: இதையடுத்து புதுவை சட்டப்பேரவை அருகேயுள்ள சுகாதார இயக்கக அலுவலகம் முன் என்எச்எம் செவிலியா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் அலுவலக வளாகப் படிகளில் அமா்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்த... மேலும் பார்க்க

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பா... மேலும் பார்க்க

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா். புதுவை சட்டப்பே... மேலும் பார்க்க

விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவை மாநிலத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ரூ.6.25 லட்சமாக அதிகரிப்பு

புதுவை மாநிலத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தில் அரசு நிதி ரூ.6.25 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க