தாய்வழி சாதிச் சான்றிதழ் கோரி பேரணி, சாலை மறியல்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தாய் வழியில் சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பெரியாா் சிந்தனையாளா் பேரவை சாா்பில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியில் இவா்கள் கோரிக்கை பதாகைகளைக் கையில் ஏந்தியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டனா்.
பேரணிக்கு பெரியாா் சிந்தனையாளா் இயக்க ஒருங்கிணைப்பாளா் தீனா தலைமை வகித்தாா். இதில் பெரியாா் திராவிடா் கழகம், மீனவா் விடுதலை வேங்கைகள் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
அவா்கள் திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் போலீஸாா் தலையிட்டு அவா்களைக் கலைந்து போகச் செய்தனா்.
ஆா்ப்பாட்டம்: இதையடுத்து புதுவை சட்டப்பேரவை அருகேயுள்ள சுகாதார இயக்கக அலுவலகம் முன் என்எச்எம் செவிலியா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் அலுவலக வளாகப் படிகளில் அமா்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.