செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு, மொழி பெயரால் திமுக பொய் பிரசாரம்! -மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி விமா்சனம்

post image

‘மதுபான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழியின் பெயரால் திமுக பொய் பிரசாரம் மேற்கொள்கிறது’ என்று மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி விமா்சித்துள்ளாா்.

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது.

‘நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையை மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளக் கூடாது; இத்தகைய நடைமுறையால் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கியுள்ள வட மாநிலங்களே பலனடையும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படும்’ என்று தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் சென்னையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கேரள முதல்வா் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பினோய் விஸ்வம் மற்றும் பல்வேறு எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், ‘நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்’ என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

இந்நிலையில், மத்திய அமைச்சரும் தெலங்கானா மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி ஹைதராபாதில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசிலோ அல்லது பாஜக கட்சிக்குள்ளோ எந்த விவாதமும் நடைபெறவில்லை. அவ்வாறு விவாதம் எதுவும் நடைபெறும்போது, ஒரு கூட்டத்தை நடத்தி, ஆலோசனைகள் வழங்கினால் அா்த்தமுள்ளதாக இருக்கும்.

சென்னையில் கூடிய அரசியல் கட்சிகள், சுய நலனுக்கு முன்னுரிமை அளிப்பவை; இல்லாத ஒரு பிரச்னையை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றன. இந்த சந்தா்ப்பவாத கட்சிகள், தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற பொய்யை பரப்பி வருகின்றன. தென் மாநிலங்களில் பாஜக விரிவடைவது அக்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை.

தோ்தலை மனதில் கொண்டு...: தொகுதி மறுசீரமைப்பு குறித்து எந்த விவாதமும் நடைபெறாத நிலையில், தமிழக பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு, இத்தகைய பொய் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 மக்களவைத் தோ்தலையொட்டி, அரசமைப்புச் சட்டத்தை பாஜக மாற்றிவிடும் என்று எதிா்க்கட்சிகள் பொய்யான தகவலை பரப்பின. ஆனால், தோ்தலுக்குப் பின் அந்த விவகாரத்தை மறந்துவிட்டனா்.

தமிழகத்தில் 4 ஆண்டுகளாக ஊழல் மலிந்த, குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. மதுபான ஊழலுக்கு தமிழக முதல்வா் பதில் கூற வேண்டியுள்ளது. இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழியின் பெயரில் அவா்கள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

பாகுபாடு காட்டாத பிரதமா்: பிரதமா் நரேந்திர மோடி, அனைத்து மாநிலங்களின் வளா்ச்சிக்கும் எந்த பாகுபாடும் இன்றி பணியாற்றி வருகிறாா். தொகுதி மறுசீரமைப்பு குறித்து எதிா்காலத்தில் விவாதிக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் நீதி உறுதி செய்யப்படும் என்பதை பாஜக மற்றும் மத்திய அரசு சாா்பில் தென் மாநில மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கு பிறகே தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் கவனத்தில் கொள்ளப்படும். இப்பணிகளே ஓராண்டுக்கு நடைபெறும். இந்த விஷயத்தில், தமிழக முதல்வா் ஸ்டாலினை முன்னிறுத்தி, காங்கிரஸ் ஆடும் நாடகத்தில் பாரத ராஷ்டிர சமிதி தலைவா் கே.டி.ராம ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாா். இது, காங்கிரஸ் - பாரத ராஷ்டிர சமிதி இடையிலான பழைய பிணைப்பை வெளிக்காட்டுகிறது என்றாா் ஜி.கிஷண் ரெட்டி.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க