செய்திகள் :

"கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு; ஆனால்..."-காமெடியன் குணால் கம்ரா குறித்து ஏக்நாத் ஷிண்டே

post image

மகராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, தனது நிகழ்ச்சி ஒன்றில் ‘தில் தோஹ் பகல் ஹைய்’ என்ற இந்திப் படத்தின் பிரபலமான பாடலைப் பாடி, மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேரடியாக குறிப்பிடாமல் துரோகி என மறைமுகமாக பகடி செய்திருந்தார். மேலும் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிளவுகளையும் கேலி செய்திருந்தார். குணாலின் இந்த அரசியல் நையாண்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருகிறது.

குணால் கம்ராவின் அரசியல் நையாண்டி பேச்சால் ஆத்திரமடைந்த சிவசேனா ஆதரவாளர்கள், அவர் காமெடி நிகழ்ச்சி நடத்திய ஸ்டுடியோவை (க்ளப்) அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து குணால், "உங்களால் ஒரு நகைச்சுவையை உள்வாங்க முடியவில்லை. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்குமான உரிமை. நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை." என்று பதிலளித்திருந்தார். இது சர்ச்சைகளை இன்னும் கிளரிவிட்டிருந்தது.

தற்போது ஏக்நாத் ஷிண்டே இந்த விவகாரம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், "கருத்துச் சுதந்திரமனாது எல்லோருக்கும் உண்டு. ஆனால், சிலர் அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

அந்த நபர் என்னை மட்டுமல்ல பிரதமர் உட்பட நாட்டின் மதிப்பு மிக்கத் தலைவர்களை காமெடி என்ற பெயரில் உள்நோக்கத்துடன் விமர்சித்திருக்கிறார். அதற்காக வன்முறை, அடித்து உடைத்து பொருட்சேதங்களை ஏற்படுத்துவதை நான் ஆதரிக்கவில்லை. அவருக்குப் பின்னால் ஏதோ அரசியல் பின்புலம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

ஒன் பை டூ!

நாராயணன் திருப்பதிநாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க“எங்கள் தலைவர் சொல்லியிருப்பது உண்மைதானே... இந்த தி.மு.க அரசு, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மக்களைக் குடிப்பழக்கத்துக்கு அ... மேலும் பார்க்க

Amit Shah: 2026 இல் தமிழகத்தில் NDA ஆட்சியமைக்கும் - எடப்பாடியின் சந்திப்பும் அமித்ஷாவின் பதிவும்

அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்திருக்கின்றனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, '2026 இல் தமிழகத்தில் தேசிய ஜன... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: `அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!' - பியூஷ் மனுஷ் சொல்வதென்ன?

மதுரை மாவட்டத்தில் இருக்கும் திருப்பரங்குன்றம் மலையானது முருகன் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, சமண சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்ட மதநல்லிணக்கத்துக்கு சான்றான தளமாக விளங்குகிறது.... மேலும் பார்க்க

ஏக்நாத் ஷிண்டே விவகாரம்: "மன்னிப்பு கேட்கப் போவதில்லை" - ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா பதிலடி!

மகராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, தனது நிகழ்ச்சி ஒன்றில் ‘தில் தோஹ் பகல் ஹைய்’ என்ற இந்திப் படத்தின் பிரபலமான பாடலைப் பாடி, மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேரடியாக குற... மேலும் பார்க்க