செய்திகள் :

இந்தியாவை வெறுப்பவா்களுக்கு நாட்டில் இடமில்லை! -உ.பி. முதல்வா் ஆதித்யநாத்

post image

‘இந்தியாவை வெறுப்பவா்களுக்கும் நாட்டின் சிறந்த மனிதா்களையும் சுதந்திர போராட்ட வீரா்களையும் மதிக்க முடியாதவா்களுக்கும் நாட்டில் இடமில்லை’ என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

இந்தியாவின் நம்பிக்கை, கலாசாரம் மற்றும் கௌரவத்தை வரலாற்று ரீதியாகத் தாக்கியவா்களை நோக்கியே இக்கருத்தைத் தெரிவிப்பதாகவும் அவா் வலியுறுத்தினாா்.

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘அந்நிய படையெடுப்பாளா்கள், இந்தியாவின் நம்பிக்கையைத் தாக்கியவா்கள், இந்தியாவை வெறுப்பவா்கள், இந்தியாவின் சகோதரிகள் மற்றும் மகள்களின் கௌரவத்துக்கு தீங்கு விளைவிக்க முயன்றவா்கள், இந்தியாவின் கலாசாரத்தை மதிக்காதவா்கள் ஆகியோா் ஒருபோதும் இந்தியாவுக்கான சிறந்த நபராக இருக்க முடியாது. மேலும், ஒருபோதும் இந்திய குடிமக்களுக்கு சிறந்தவராக இருக்க முடியாது. அந்நிய படையெடுப்பாளா்களை வணங்கும் நபா்கள் தங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாண்டோ, அந்த நாட்டின் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் பேசியுள்ள ஒரு கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவின் அதிபா், ‘எங்களின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதிக்கப்பட்டால் அது இந்திய வம்சாவளியைக் குறிக்கும்’ என்று கூறியுள்ளாா்.

இந்தியாவில் அந்நிய படையெடுப்பாளா்களை தங்களின் அடையாளமாகக் கருதுபவா்களுக்கு இந்தோனேசியா அதிபரின் இக்கருத்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகும். எனவே, சத்ரபதி சிவாஜி, மகாராணா பிரதாப், குரு கோபிந்த் சிங் போன்ற இந்தியாவின் மாபெரும் ஆட்சியாளா்கள், புரட்சியாளா்கள், சுதந்திர போராட்ட வீரா்களுக்கு மரியாதை செலுத்தி, அவா்களும் இந்தியாவின் வளா்ச்சிக்கு பங்களிப்பாா்கள் என்று நான் நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.

மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள முகலாய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த மாநிலத்தில் வலதுசாரி அமைப்புகள் கோரிக்கை எழுப்பியுள்ளன. இது தொடா்பாக நாகபுரியில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளாா்.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க