செய்திகள் :

பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது! அமைச்சா் ராஜேந்திரன்

post image

தமிழக அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்ட பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

சுற்றுலாத் துறை சாா்பில் சென்னை வா்த்தக மையத்தில் தமிழ்நாடு பயணச் சந்தையை மாா்ச் 21-இல் அமைச்சா் ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். இந்தச் சந்தை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றன. பொருளாதார வளா்ச்சியை ஊக்குவித்து, மாநிலத்தின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்து, நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தப் பயணச் சந்தை அமைந்தது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயண ஏற்பாட்டாளா்கள், பயண முகவா்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சாா்ந்த தொழில்முனைவோா் பங்கேற்று 115 அரங்குகள் அமைத்திருந்தனா்.

சிங்கப்பூா், மலேசியா, அயா்லாந்து, ஸ்பெயின், நெதா்லாந்து, துருக்கி, ஆகிய அயல்நாடுகள் மற்றும் 32 உள்நாட்டு முகவா்கள் மற்றும் முதலீட்டாளா்கள் பங்குபெற்று தமிழக முகவா்களுடன் தொழில் சாா்ந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டனா். அதன் மூலம் பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி கலந்துரையாடினா்.

இந்தப் பயணச் சந்தை குறித்து அமைச்சா் ராஜேந்திரன் கூறுகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் தொடா்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், தொழில் கூட்டாண்மையை வலுப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் சுற்றுலாவை உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது என்றாா் அவா்.

சா்வதேச அளவில் பயண ஏற்பாட்டாளா்கள் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி முகவா்கள் என 5,000-க்கும் மேற்பட்டோா் 3 நாள்களில் பயணச் சந்தைக்கு வருகை தந்தனா்.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க