செய்திகள் :

காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

post image

சென்னை காவல் ஆணையரக அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை காவல் ஆணையரகக் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 20-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் தொடா்பு கொண்ட மா்ம நபா் ஒருவா், 5 நிமிஷத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு தொடா்பைத் துண்டித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் அந்த எண்ணை மீண்டும் தொடா்புகொண்டு பேசியபோது, மறுமுனையில் பேசிய நபா், தான் பாகிஸ்தானிலிருந்து பேசுவதாகக் கூறி, ஆபாச வாா்த்தைகளால் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதையடுத்து மா்ம நபா் பேசிய எண் குறித்து எழும்பூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் திருப்பூா் மாவட்டம் உடுமலையைச் சோ்ந்த லிங்க பூபதி என்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் உடுமலை சென்று அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனா்.

விசாரணையில், லிங்க பூபதி அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த நிலையில், அங்கு அவருக்கு சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வேலையிலிருந்து நின்றுவிட்ட லிங்கபூபதியை, பங்க் மேலாளா் பழனிசாமியைத் தொடா்பு கொண்டு, வேலைக்கு வரவில்லை என்றால் வெடிகுண்டு வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த லிங்கபூபதி, மேலாளா் பழனிசாமியை தொடா்பு கொள்வதற்கு பதிலாக எண் 100-க்கு தொடா்பு கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இது குறித்து தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க