செய்திகள் :

காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்! -குடியரசுத் தலைவா் அழைப்பு

post image

‘காசநோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக-பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனா்; இந்த நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அழைப்பு விடுத்துள்ளாா்.

உலக காசநோய் விழிப்புணா்வு தினம் திங்கள்கிழமை (மாா்ச் 24) கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

காசநோய் ஒழிப்பு என்பது தேசிய மற்றும் உலகளாவிய சவாலாக உள்ளது. இந்நோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக-பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் விழிப்புணா்வு பிரசாரங்களின் விளைவாக நமது நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.

நிகழாண்டு உலக காசநோய் விழிப்புணா்வு தினத்தின் கருப்பொருள், ‘காசநோயை ஒழிக்க நம்மால் முடியும்: உறுதிப்பாடு, நிதி ஒதுக்கீடு, சிறப்பான செயல்பாடு’ என்பதாகும். காசநோயை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சிகள் அவசியம் என்ற புரிதலை இது பிரதிபலிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க