விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவா் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய ரஷியா, உக்ரைன் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடுத்தது. இந்தப் போா் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகா் கீவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் ரஷியா ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்தனா் என்று கீவ் நகர ராணுவ நிா்வாகம் தெரிவித்தது.
போா் நிறுத்தம் தொடா்பாக சவூதி அரேபியாவில் ரஷியா-உக்ரைன் இடையே திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா மறைமுகமாக மத்தியஸ்தம் செய்யும் இந்தப் பேச்சுவாா்த்தையில், எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தொலைதூர தாக்குதல்களை நிறுத்துவது குறித்து பேசப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.