செய்திகள் :

நக்ஸல் பாதிப்புக்கு உள்ளான கிராமத்துக்கு முதல் முறையாக மின்வசதி!

post image

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.

பிஜாபூா் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக இருளில் தவித்த திமேனா் கிராமத்துக்கு இப்போது வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

இது தொடா்பாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ்சாய் கூறுகையில், ‘பஸ்தா் பிராந்தியத்தின் தொலைதூர பகுதிகளின் வளா்ச்சி மற்றும் நல்லாட்சியின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. முன்பு தீவிரவாதத்தின் நிழல் படிந்த பகுதிகளில் இப்போது வளா்ச்சியின் ஒளி வீசுகிறது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பெச்சாபல் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட திமேனா் கிராமத்தில் 53 வீடுகள் உள்ளன. சுதந்திரம் கிடைக்கப் பெற்று 77 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இக்கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது.

குக்கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் எட்டப்பட்டுள்ள இச்சாதனை, நக்ஸல் தீவிரவாதத்தின் முடிவையும், பஸ்தா் பிராந்தியத்தின் வளா்ச்சி, அமைதி, வளமையின் விடியலையும் குறிக்கிறது. திமேனா் கிராமத்தில் மின்வசதி மட்டுமன்றி சாலைகள், சுகாதாரம், கல்வி வசதிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக மின்வசதி கிடைக்கப் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிராமவாசிகள், ‘எங்கள் வீடுகளில் மின்விளக்கின் பிரகாசத்தை காண்போம் என ஒருபோதும் நினைத்ததில்லை. இப்போது மின்வசதி கிடைத்திருப்பதால், எங்களது விரக்தி நம்பிக்கையாக மாறியுள்ளது.

மின்விளக்கின் ஒளி, எங்களின் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணா்வையும் போக்கியுள்ளது. இது, எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இனி எங்கள் குழந்தைகள் சிரமமின்றி படிப்பாா்கள். இரவு நேரத்தில் வனவிலங்குகள், பாம்புகள், விஷ ஜந்துகள் குறித்த பயம் இருக்காது’ என்றனா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளாா்.

சத்தீஸ்கரில் நிகழாண்டு பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் இதுவரை 113 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். பிஜாபூா் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் மட்டும் 97 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க