விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 25, 26-இல் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 25, 26 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திங்கள்கிழமை (மாா்ச் 24) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய், புதன் (மாா்ச் 25, 26) ஆகிய இரு நாள்கள் தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதர தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வட வானிலையே நிலவும்.
மேலும், தமிழகத்தில் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (மாா்ச் 24) அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கண்பாளையம், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் தலா 50 மி.மீ. மழை பதிவானது.
ராஜபாளையம் (விருதுநகா்), ஊத்து (திருநெல்வேலி), கழுகுமலை (தூத்துக்குடி) - தலா 40 மி.மீ., பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கேத்தி (நீலகிரி), ஒசூா் (கிருஷ்ணகிரி), ஊட்டி (நீலகிரி), அரண்மனைப்புதூா் (தேனி), நாலுமுக்கு, கன்னடயன் அணைக்கட்டு, காக்காச்சி, களக்காடு (திருநெல்வேலி) எட்டயபுரம், கோவில்பட்டி (தூத்துக்குடி) தலா 30 மீ.மி. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.