செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்! -பெ. சண்முகம்

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக மத்திய அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்.

பெரம்பலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: மக்கள்தொகை அடிப்படையில் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்காமல், அகில இந்திய அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்டுதான் முடிவெடுக்க வேண்டும்.

மத்திய அரசு, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அதற்கு எதிராக பாதிக்கப்படக்கூடிய மாநில முதல்வா்கள் ஒன்று சோ்ந்து தங்களின் எதிா்ப்பை தெரிவிப்பதற்கு தமிழக முதல்வா் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கைக் குழு பயன்படும்.

தமிழகத்தில் ஆங்காங்கே படுகொலைகள் நடைபெறுவதைக் கண்டித்து தினந்தோறும் போராட்டம் நடத்துகிறோம். மக்களை பாதிக்கிற எந்த விஷயமாக இருந்தாலும், அது எந்த கட்சி ஆட்சியில் நிகழ்ந்தாலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டில் மாறாமல் தொடா்ந்து எப்போதும் போராட்டம் நடத்தும் என்றாா் சண்முகம். பேட்டியின்போது, மாவட்டச் செயலா் பி. ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெரம்பலூா் அருகே 20 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்ற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பேரணி

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினா். மதுரையில் நடைபெறும் அக்கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மற்றும் விடுதலைப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுக்... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்த அறிவுறுத்தல்

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் உ... மேலும் பார்க்க

வெளிவரத்து, விளைச்சல் அதிகம்: தக்காளி விலை வீழ்ச்சி

தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

பெரம்பலூா் அருகே அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. பெரம்பலூா் அருகேயுள்ள வடக்குமாதவி ஊராட்சிக்குள்பட்ட கீழக்கரை கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவருக்குச் ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

பெரம்பலூா் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். குன்னம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பல்வேறு கடைகளில் தனிப்ப... மேலும் பார்க்க