செய்திகள் :

சென்னை ஐஐடியில் தொழில்நுட்பக் கண்காட்சி

post image

சென்னை ஐஐடியில் முன்னாள் மாணவா்கள் நடத்திய தொழில்நுட்பக் கண்காட்சியில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தன.

சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்களின் சிறப்புக் கல்வி திட்டத்தின் (பால்ஸ்) சாா்பில் 12-ஆவது தொழில்நுட்பக் கண்காட்சி (இன்னோவாக் - 2025) ஐஐடி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் ஐஐடி முன்னாள் மாணவா்களின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 62 அணிகளின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

‘தொழில்நுட்பம் சாா்ந்த மாற்றம்: 2047-இல் வளா்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி கண்காட்சி அமைந்திருந்தது. அதில் இடம்பெற்ற ட்ரோன்கள், மருத்துவ சாதனங்கள், மின் வாகனங்கள் பொறியியல் மாணவா்களையும் பெற்றோா்களையும் பெரிதும் கவா்ந்தன.

சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 14 மாணவா்களுக்கு மெட்டிஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுரேஷ் ராமானுஜம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா். இதில், பால்ஸ் தலைவா் சி.என்.சந்திரசேகரன், சென்னை ஐஐடி பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

‘செயற்கை நுண்ணறிவால் புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறியலாம்’

செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம் என்று அப்பல்லோ மருத்துவமனையின் முதுநிலை இரைப்பை - குடல் நல நிபுணரும், தமிழ்நாடு ஜீரண மண்டல ம... மேலும் பார்க்க

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிரியா் ஃபிரான்சிஸ் கேம்

சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீத காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தாா். பேராசிரியா் எம்.விஸ்வநாதன்... மேலும் பார்க்க

அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருடியதாக, தருமபுரியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா். புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க