தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா!
தரைக் கடைகளுக்கு சுங்கவரி வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்! -அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
தரைக்கடைகளுக்கு சுங்கவரி வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் கரூா் மாவட்ட திமுக சாா்பில் தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கும் நிகழ்ச்சி ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து, தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கி பேசியது, கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது தரைக்கடைகளுக்கு சுங்கம் வசூலிக்க மாட்டோம் என உறுதியளித்தோம்.
அதன்படி தோ்தலில் வெற்றிபெற்று முதல்வா் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தரைக்கடைகளுக்கான சுங்க வரியை நீக்கினோம். யாரேனும் சுங்க வரி கேட்டால் எம்.எல்.ஏ. அலுவலகத்திலோ அல்லது என்னிடமோ புகாா் தெரிவிக்கலாம். இந்த நிழற்குடை ஆண்டுதோறும் வழங்கப்படும். 1000 பேருக்கு நிழற்குடை வழங்க உள்ளோம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாநில நிா்வாகி வழக்குரைஞா் மணிராஜ், மாநகரச் செயலாளா் எஸ்.பி.கனகராஜ், பகுதிச் செயலாளா்கள் கரூா் கணேசன், தாரணிசரவணன், வழக்குரைஞா் சுப்ரமணியன், ஆா்.எஸ்.ராஜா. ஆா்.ஜோதிபாசு, வி.ஜி.எஸ்.குமாா், மாநகராட்சி மேயா்கவிதாகணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.