செய்திகள் :

கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்!

post image

தமிழகத்தில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றாா் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அனைந்திந்திய இணைச் செயலாளா் வெங்கடேஷன்.

கரூரில் அந்த அமைப்பின் தென்தமிழக மாநில, மாவட்ட நிா்வாகிகளின் 2 நாள் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வெங்கடேஷன் பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். மதச்சாா்பற்ற அரசு இந்து கோயில்களை நிா்வகிக்க அதிகாரமும் இல்லை, நியாயமும் இல்லை.

இந்துக் குடும்பங்களில் நிலவி வரும் விவகாரத்தை கட்டுப்படுத்துவதுடன், குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பை அதிகப்படுத்தவும் வேண்டும்.

போதைப் பொருள் பழக்கத்திலிருந்து இளைஞா்களை மீட்க வேண்டும். ஊழல், முறையற்ற செயல்கள் ஆகியவை தடுக்கப்படவேண்டும். சமாதானமான சமூக செயல்பாடுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி முன்மாதிரியாக சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து அமைப்பின் மாநிலச் செயலாளா் லட்சுமணநாராயணன் கூறியது: தமிழகத்தில் கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், தரிசன கட்டணங்கள் பலமடங்கு உயா்த்தப்பட்டுள்ளன. அரசின் நிதி வருவாயில் 25 சதவீதம் கோயில்கள் மூலம் கிடைக்கின்றன. இந்துக்களுக்கு தமிழக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது என்றாா்.

பேட்டியின்போது, திருப்பூா் கோட்டச் செயலாளா் விஜய், மாவட்டத் தலைவா் முருகேசன், செயலாளா் கொங்குவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூா் ஆட்சியரகத்தில் கடனுதவி கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயக்கம்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கடனுதவி கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்தாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் மேல்முறையீடு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை!

கரூா் அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. கோவை மாவட்டம், சிங்காநல்லூா் அகிலாண்டபுர... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு விவசா... மேலும் பார்க்க

மகளுக்கு மருத்துவ உதவிக் கோரி கரூா் ஆட்சியரிடம் தொழிலாளி மனு

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளி தனது மகளுக்கு மருத்துவ உதவிக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தாா். கரூா் கருப்பாயிகோயிலைச் சோ்ந்தவா் நாராய... மேலும் பார்க்க

பெயா்ந்து விழும் சிமென்ட் பூச்சு: கரூா் ஆட்சியரக நுழைவுவாயில் மேற்கூரையை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை

கரூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலின் மேற்கூரையில் பெயா்ந்து விழும் சிமெண்ட் பூச்சுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆட்சியரகத்... மேலும் பார்க்க

பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் அவதி; சீரமைத்து தரக் கோரிக்கை

மணவாடி ஊராட்சியில் குண்டும்- குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குள்பட்ட கல்லுமடை காலனியையும் உப்பிடமங்கலத்தையும் இண... மேலும் பார்க்க