செய்திகள் :

கரூா் ஆட்சியரகத்தில் கடனுதவி கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயக்கம்

post image

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கடனுதவி கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்தாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கரூா் புத்தாம்பூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த புஷ்பலதா (42) என்பவா் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு அலுவலக வளாகத்தின் படிக்கட்டு வழியாக வந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் போலீஸாா் அவரை மீட்டு முதலுதவி அளித்தனா். பின்னா் வலிப்பு நோய்க்கு அந்த பெண் இடுப்பில் வைத்திருந்த இரும்புச் சாவியையும் எடுத்துக்கொடுத்தனா்.

இதையடுத்து அவா் மயக்க தெளிந்த பிறகு அந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரித்தபோது, தனது கணவா் பாண்டியன் கரூரில் உள்ள பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தாா். அவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இதனால் தனது மகனுடன் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு கடந்த 14 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருப்பதால், வேலை தேடி செல்லும் நிறுவனங்கள் வலிப்பு நோயை காரணம் காட்டி வேலை தர மறுக்கிறாா்கள். எனவே பெட்டிக்கடை வைக்க வங்கிக் கடனுதவிக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க வந்ததாக தெரிவித்தாா்.

இதையடுத்து தகவலறிந்து வந்த ஆட்சியா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்தகுமாரை வரவழைத்து அந்த பெண்ணுக்குத் தேவையான கடனுதவி வழங்குமாறு தெரிவித்தாா். இதையடுத்து புஷ்பலதாவை சந்தித்த வசந்தகுமாா் ஆட்சியா் உத்தரவின்பேரில் உங்களுக்கு வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறினாா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வெங்கட்டரமணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் 2025-2026 ... மேலும் பார்க்க

சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூ... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் பாஜகவினா் 20 போ் கைது

சின்னதாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை மதுக்கடையில் தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சின்னதாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் படத்த... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணி தீவிரம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 10 நாள்களாக சாலை... மேலும் பார்க்க

குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். கரூா் மா... மேலும் பார்க்க

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா

கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொ... மேலும் பார்க்க