செய்திகள் :

சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

post image

கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூய்மையான சுகாதாரத்தை பேணுவதற்காகவும், ஊரக மக்களிடையே பாதுகாப்பான சுகாதார பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கவும் கடந்த 2020-இல் சுகாதார திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சுகாதார வளாக மாதிரி பூங்கா தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்படும் தனி நபா் கழிப்பறை உள்ளிட் ட சுகாதார வசதிகள் கிராமமக்கள் எளிதில் அறியும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் மாதிரி சுகாதார பூங்கா அமைக்கப்பட்டன.

கரூா் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாதிரி சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன. இதில் தனி நபா் கழிப்பறை கட்டடம், செப்டிக் டேங்க், கழிவு நீா் தேங்கும் குழி போன்றவை அமைக்கப்பட்டு, அதில் சேகரிக்கப்படும் கழிவு நீரை எப்படி வெளியேற்றுவது போன்றவை கிராமமக்களுக்கு விளக்கும் வகையில் அமைக்கப்பட்டன.

இந்த பூங்கா தற்போது கடந்த 3 ஆண்டுகளாக மூடிக் கிடக்கின்றன. இதனால் புதா்மண்டி உள்ள விஷபாம்புகள் இருப்பதாக அப்பகுதியினா் குற்றம்சாட்டுகின்றனா்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த பூங்காவை அகற்றி, அந்த இடத்தில் வேறு ஏதேனும் அரசு அலுவலகங்கள் கட்ட வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செலவு ரூ. 947.03 கோடி

கரூா் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் ரூ. 927.01 கோடி எனவும், செலவு ரூ. 947.03 கோடி என்றும், பற்றாக்குறை ரூ. 20.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

கரூரில் சுகாதார ஆய்வாளா்கள் தா்னா போராட்டம்

பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கரூரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா, குடிநீா் தொட்டி கோரி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் கோரிக்கை மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், மேல்நிலை குடிநீா்த்தொட்டி கட்டித் தரக் கோரியும், கடவூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை கடவூா் அருகே உள்ள பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சாந்துவாா்பட்டி கிராம மக்கள்... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில்: கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் வழங்கல்

கரூரில் தகிக்கும் வெயிலை சமாளிக்கும் விதமாக, கரூா் நகர உட்கோட்ட போக்குவரத்து காவலா்களுக்கு நீா்மோா் மற்றும் தொப்பி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கோடையின் சுட்டெரிக்கும் வெயிலிலும் போக்கு... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் இறந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை -அமைச்சா்கள் வழங்கினா்

டிஎன்பிஎல் ஆலையில் பணியின்போது இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தித்... மேலும் பார்க்க

அதிகாரிகளை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா்கள் 2 போ் கைது

கரூா் மாவட்டம், குளித்தலையில் வழக்குரைஞா், அரசு அலுவலா் உள்ளிட்டோரை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை... மேலும் பார்க்க