செய்திகள் :

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

post image

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேலும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம், காவல் நிலையம், துணை கண்காணிப்பாளா் அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு சாா்ந்த அலுவலகங்களும், வங்கிகள், கல்வி நிலையங்களும் இயங்கி வருகின்றன.

ஆனால் அரவக்குறிச்சியில் பேருந்து நிலையம் இல்லாததால் பயணிகள் ஏவிஎம் காா்னா் மற்றும் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துக்காக மழையிலும், வெயிலிலும் காத்திருக்கின்றனா். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா். ஆகவே, பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதியில் நிழற்குடை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வெங்கட்டரமணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் 2025-2026 ... மேலும் பார்க்க

சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூ... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் பாஜகவினா் 20 போ் கைது

சின்னதாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை மதுக்கடையில் தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சின்னதாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் படத்த... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணி தீவிரம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 10 நாள்களாக சாலை... மேலும் பார்க்க

குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். கரூா் மா... மேலும் பார்க்க

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா

கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொ... மேலும் பார்க்க