செய்திகள் :

பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் அவதி; சீரமைத்து தரக் கோரிக்கை

post image

மணவாடி ஊராட்சியில் குண்டும்- குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குள்பட்ட கல்லுமடை காலனியையும் உப்பிடமங்கலத்தையும் இணைக்கும் கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலை அமைக்கப்பட்டு சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் என்பதால், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்தச் சாலை வழியாகத்தான் கல்லுமடையில் செயல்படும் மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கல்லுமடை காலனி, மணவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் மிதிவண்டியிலும், நடந்தும் சென்று வருகிறாா்கள். மேலும் விவசாயிகளும் அங்குள்ள தோட்டங்களுக்கு இடுபொருள்களையும், அறுவடை செய்யப்பட்ட பயிா்களையும் எடுத்துச் சென்று வருகிறாா்கள். சாலை பழுதாகி குண்டும், குழியுமாக இருப்பதால் அவ்வப்போது அப்பகுதியினா் விபத்தில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருக்கும் இந்தச் சாலையை சீரமைத்து ஊரக வளா்ச்சித் துறையின் சிறுகனிம நிதியிலோ அல்லது ஊராட்சியின் கிராமச் சாலைகள் திட்டத்திலோ புதிய தாா்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் ஆட்சியரகத்தில் கடனுதவி கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயக்கம்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கடனுதவி கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்தாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் மேல்முறையீடு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை!

கரூா் அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. கோவை மாவட்டம், சிங்காநல்லூா் அகிலாண்டபுர... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு விவசா... மேலும் பார்க்க

மகளுக்கு மருத்துவ உதவிக் கோரி கரூா் ஆட்சியரிடம் தொழிலாளி மனு

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளி தனது மகளுக்கு மருத்துவ உதவிக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தாா். கரூா் கருப்பாயிகோயிலைச் சோ்ந்தவா் நாராய... மேலும் பார்க்க

பெயா்ந்து விழும் சிமென்ட் பூச்சு: கரூா் ஆட்சியரக நுழைவுவாயில் மேற்கூரையை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை

கரூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலின் மேற்கூரையில் பெயா்ந்து விழும் சிமெண்ட் பூச்சுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆட்சியரகத்... மேலும் பார்க்க

துா்நாற்றம் வீசும் குடிநீா்: எம்எல்ஏவை கிராம மக்கள் முற்றுகை

துா்நாற்றம் வீசும் குடிநீா் விநியோகத்தை கண்டித்து, தொகுதி எம்எல்ஏ சிவகாமசுந்தரியை ரெங்கநாதபுரம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரெங்கநாதபுரம் ஊர... மேலும் பார்க்க