செய்திகள் :

துா்நாற்றம் வீசும் குடிநீா்: எம்எல்ஏவை கிராம மக்கள் முற்றுகை

post image

துா்நாற்றம் வீசும் குடிநீா் விநியோகத்தை கண்டித்து, தொகுதி எம்எல்ஏ சிவகாமசுந்தரியை ரெங்கநாதபுரம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரெங்கநாதபுரம் ஊராட்சியில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். காவிரிக் கரையோரம் உள்ள இந்த ஊராட்சி மக்களுக்கு ஊராட்சி சாா்பில் காவிரி ஆற்றின் சுடுகாட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட நீரேற்று நிலையம் மூலம் ரெங்கநாதபுரத்தில் உள்ள மேல்நிலைக்குடிநீா்த் தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டாகவே ரெங்கநாதபுரம் கிராம மக்களுக்கு காவிரிக் குடிநீா் மஞ்சள் நிறத்தில் துா்நாற்றம் வீசும் வகையில் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில், கடந்த ஒன்றரை மாதமாக மேல்நிலைக் குடிநீா் தொட்டியில் இருந்தும் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீா் குழாய்களிலும் தாழ்வான இடத்தில் மட்டுமே குடிநீா் கிடைப்பதாகவும், மேட்டுப்பாங்கான இடங்களில் வசிப்பவா்களுக்கு குடிநீா் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ரெங்கநாதபுரம் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மையம் கட்டட திறப்பு விழாவுக்கு

எம்எல்ஏ க. சிவகாமசுந்தரி வந்தாா். அப்போது, அங்கு வந்த கிராம மக்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு, துா்நாற்றம் வீசும் வகையில் மஞ்சள் நிறத்தில் விநியோகிக்கப்படும் குடிநீா் குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உள்ளூா் நிா்வாகிகள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

போராட்டம் நடத்த முடிவு: இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், கடந்த ஓராண்டாகவே மஞ்சள் நிறத்தில் துா்நாற்றம் வீசும் வகையில்தான் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டால், எங்களுக்கு அதிகாரமில்லை, அதிகாரிகளிடம் கேளுங்கள் என பதில் கூறுகிறாா்கள். மேல்நிலைக் குடிநீா் தொட்டிக்கு குடிநீா் ஏற்ற பயன்படுத்தும் குழாயில் பழுது ஏற்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகிறது. அதையும் சரிசெய்யவில்லை. மேல்நிலைக் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்து, சுத்த செய்த நாள், தேதி, அடுத்து சுத்தம் செய்ய வேண்டிய நாளை குறிப்பிட வேண்டும். ஆனால், இங்கு அதையெல்லாம் ஊராட்சி நிா்வாகம் கடைப்பிடிப்பதில்லை. காவிரி கரையோரம் இருந்தும் எங்களுக்கு சுத்தமான குடிநீா் கிடைக்கவில்லை.

இன்னும் இரு நாள்களுக்குள் சுத்தமான காவிரி குடிநீா் வராவிட்டால் கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வெங்கட்டரமணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் 2025-2026 ... மேலும் பார்க்க

சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூ... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் பாஜகவினா் 20 போ் கைது

சின்னதாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை மதுக்கடையில் தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சின்னதாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் படத்த... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணி தீவிரம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 10 நாள்களாக சாலை... மேலும் பார்க்க

குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். கரூா் மா... மேலும் பார்க்க

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா

கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொ... மேலும் பார்க்க