செய்திகள் :

பெண் கொலை வழக்கில் மேல்முறையீடு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை!

post image

கரூா் அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூா் அகிலாண்டபுரத்தைச் சோ்ந்தவா் நடராஜ் (58). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு கரூா் மாவட்டம் தென்னிலை அடுத்த காா்வழியில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்தபோது அங்கு பணியாற்றிய பொன்னம்மாள் என்கிற தனலட்சுமியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜிக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜ், தனலட்சுமியை கொலை செய்து அங்குள்ள வாய்க்காலில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளாா். இதுதொடா்பாக தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து நடராஜை கைது செய்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் 2018-இல் வழக்குத்தொடா்ந்தனா்.

இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் நடராஜை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் குற்றவாளி நடராஜிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தீா்ப்பு வழங்கியது. இதையடுத்து நடராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வெங்கட்டரமணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் 2025-2026 ... மேலும் பார்க்க

சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கரூா் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊரக பகுதிகளில் வாழும் கிராமமக்கள் தூ... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் பாஜகவினா் 20 போ் கைது

சின்னதாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை மதுக்கடையில் தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.சின்னதாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் படத்த... மேலும் பார்க்க

சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணி தீவிரம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சின்னதாராபுரம் பகுதியில் கடந்த 10 நாள்களாக சாலை... மேலும் பார்க்க

குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். கரூா் மா... மேலும் பார்க்க

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா

கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொ... மேலும் பார்க்க