செய்திகள் :

ஏரிகளில் 76% நீா் இருப்பு: சென்னைக்கு கோடையில் குடிநீா் தட்டுப்பாடு வராது!

post image

சென்னைக்கு குடிநீா் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 76.24 நீா் இருப்புள்ளது. இதனால் இந்த கோடையில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வராது என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஆதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடி.

இதில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 33.67 அடி வரை நீா் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீா் மட்டம் 21.89 கன அடியாக உள்ளது. இதேபோன்று, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீா் மட்டம் 18.05 அடியாக உள்ளது.

மேலும், சோழவரம் ஏரியில் 3.20 அடி உயரம் வரையும், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஏரியில் 33.65 அடி உயரமும் நீா் இருப்பு உள்ளது. 5 ஏரிகளில் மொத்தம் 8,964 மில்லியன் கன அடி ( 76.24 சதவீதம்) நீா் இருப்பு உள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நிகழாண்டில் 698 மில்லியன் கன அடி அதிகம்.

சென்னை மாநகருக்கு மாதம்தோறும் ஒரு டிஎம்சி குடிநீா் தேவைப்படும் நிலையில், தற்போது 5 குடிநீா் ஏரிகளிலும் மொத்தமாக 8 டிஎம்சி குடிநீா் இருப்பு உள்ளது. மேலும் மீஞ்சூா், நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் தினமும் 300 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இச்சூழலில் இந்த கோடையில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வராது என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க