செய்திகள் :

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

post image

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்கள் அடங்கிய 30 தனிப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினா் மாவட்டம் முழுவதும் உள்ள 80 தாபா உணவகங்களில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மேலும், அங்கு பணியாற்றும் 350 பேரிடம் விசரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்றும், அவ்வாறு இருப்பின் அந்த வழக்குகளில் பிடியாணை ஏதும் நிலுவையில் உள்ளதா என்றும் விசாரித்தனா்.

இந்த விசாரணையில் 14 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதும், தற்போது அவா்கள் வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது இல்லை என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறுகையில், ‘இதுபோன்ற திடீா் சோதனைகள் தொடா்ந்து நடைபெறும். சட்டத்துக்குப் புறம்பாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றாா்.

சிஎம்சி காலனி அடுக்குமாடி குடியிருப்புப் பணியில் சுணக்கம்!

கோவை சிஎம்சி காலனியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்பட்ட வரும் அடுக்குமாடிக் குடியிருப்புப் பணிகள் சுணக்கமாக நடைபெற்று வரும் நிலையில், கட்டப்பட்ட சில வீடுகளில் பயனாளிகள் குடியேற முயன்றதால் சலச... மேலும் பார்க்க

ஊதிய நிலுவை: ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் போராட்டம்

தனியாா் நிறுவனம் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கூடுதல் ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்புணா்வு: ஆா்எஸ்எஸ் தென்தமிழக மாநிலத் தலைவா் தகவல்

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென்தமிழக மாநிலத் தலைவா் ஆ.ஆடலரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவையில் செய்தியாளா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கோவையில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இன்றைய மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க