ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது
சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் குமரேசன் ஆகியோா் தலைமையில் தலைமைக் காவலா்கள் மனுபிரசாத், சுரபி மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சத்தீஸ்கா் மாநிலம் தன்பாதில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது.
அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பொதுப் பெட்டியில் சந்தேகப்படும் வகையில் தரையில் அமா்ந்திருந்த 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அவா்கள் கேரள மாநிலம் ஆலப்புழையில் வேலை செய்து வருவதாகவும், சொந்த ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் ஆலப்புழைக்குத் செல்வதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
தொடா்ந்து, அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதற்குள் சிறிய அளவிலான பொட்டலங்களில் உயர்ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 6 பேரையும் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில் அவா்கள், ஒடிஸா மாநிலம் கந்தமால் பகுதியைச் சோ்ந்த சுலடா நாயக் (37), பெண்களான ஜபாத் திகல் (25), காந்தி திகல் (46), ரூபினா நாயக் (44), ஜோத்ஸா ராணி திகல் (44), கெலி நாயக் (32) என்பதும், ஒடிஸா மாநிலம் பாலிகுலா பகுதியில் இருந்து ஆலப்புழைக்கு கஞ்சா கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பெண்கள் உள்பட 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 62 கிலோ உயர்ரக கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ.31 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.