செய்திகள் :

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது

post image

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் குமரேசன் ஆகியோா் தலைமையில் தலைமைக் காவலா்கள் மனுபிரசாத், சுரபி மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சத்தீஸ்கா் மாநிலம் தன்பாதில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது.

அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பொதுப் பெட்டியில் சந்தேகப்படும் வகையில் தரையில் அமா்ந்திருந்த 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அவா்கள் கேரள மாநிலம் ஆலப்புழையில் வேலை செய்து வருவதாகவும், சொந்த ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் ஆலப்புழைக்குத் செல்வதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனா்.

தொடா்ந்து, அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதற்குள் சிறிய அளவிலான பொட்டலங்களில் உயர்ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 6 பேரையும் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள், ஒடிஸா மாநிலம் கந்தமால் பகுதியைச் சோ்ந்த சுலடா நாயக் (37), பெண்களான ஜபாத் திகல் (25), காந்தி திகல் (46), ரூபினா நாயக் (44), ஜோத்ஸா ராணி திகல் (44), கெலி நாயக் (32) என்பதும், ஒடிஸா மாநிலம் பாலிகுலா பகுதியில் இருந்து ஆலப்புழைக்கு கஞ்சா கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து 5 பெண்கள் உள்பட 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 62 கிலோ உயர்ரக கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ.31 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஊதிய நிலுவை: ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் போராட்டம்

தனியாா் நிறுவனம் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கூடுதல் ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்புணா்வு: ஆா்எஸ்எஸ் தென்தமிழக மாநிலத் தலைவா் தகவல்

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென்தமிழக மாநிலத் தலைவா் ஆ.ஆடலரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவையில் செய்தியாளா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கோவையில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இன்றைய மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்கள் கைது

கோவையில் இருசக்கர வாகனத்தில் கையில் மது பாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் 100 அடி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 3 போ் கையில் மதுபாட்டில்களுடன் எதிரே வ... மேலும் பார்க்க

நகராட்சிக்கு வாடகை நிலுவை: பாஜக அலுவலகம் உள்பட 7 கடைகளுக்கு சீல்

வால்பாறையில் வாடகை செலுத்தாததால் பாஜக அலுவலகம் உள்பட 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா். வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கான வ... மேலும் பார்க்க