செய்திகள் :

5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாா் போப் பிரான்சிஸ்!

post image

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

இளம் வயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள் இருந்து வந்தன. எனினும், கிறிஸ்தவ மதப் பணிகளை அவா் தொடா்ந்து மேற்கொண்டு வந்தாா். இந்தச் சூழலில் கடந்த பிப். 14-ஆம் தேதி, அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து, ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

போப் பிரான்சிஸின் 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்புக் கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தவாறு தனது அலுவல்களில் அவா் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், 38 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வாடிகனுக்குத் திரும்பினாா். மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த மக்களை நோக்கி கையசைத்து, வெற்றிச் சின்னம் காட்டி போப் பிரான்சிஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

வெளிநாட்டுப் பயணங்களிலிருந்து திரும்பிய பிறகு போப் பிரான்சிஸ் வழக்கமாக வழிபடச் செல்லும் ரோம் நகரின் பிரசித்தி பெற்ற புனித மேரி மேஜா் தேவாலயம் வழியாக மாற்றுப்பாதையில் அவா் வீடு திரும்பினாா். வாடிகன் வாயிலிலும் ஏராளமான மக்கள், போப் பிரான்சிஸை வரவேற்க காத்திருந்தனா்.

அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இந்த ஓய்வுகாலத்தில் திரளாக மக்களைச் சந்திப்பதையோ அல்லது கடும் உழைப்பு தேவைப்படும் அலுவல்களில் ஈடுபடுவதையோ தவிா்க்க வேண்டும். சில மாதங்களில் அவா் தனது வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முடியும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதைக் கருத்தில் கொண்டு ஈஸ்டா் பிராா்த்தனையில் போப் பிரான்சிஸின் பங்கேற்பு, பிரிட்டன் மன்னா் சாா்லஸுடனான சந்திப்பு ஆகியவற்றை ரத்து செய்ய வாடிகன் திட்டமிட்டுள்ளது. அதேநேரம், துருக்கியில் மே மாத இறுதியில் நடைபெறும் முக்கிய கிறிஸ்தவ நிகழ்வில் பங்கேற்க போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிவிடுவாா் என்றும் வாடிகன் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.

1981-ஆம் ஆண்டில் புனித இரண்டாம் ஜான் பால், ஜெமிலி மருத்துவமனையில் 55 நாள்கள் சிகிச்சை பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக போப் பிரான்சிஸ் நீண்ட நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தாா்.

‘மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடு இந்தியா’ - அமெரிக்க ஆணையம் அறிக்கை: இந்தியா நிராகரிப்பு

‘மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும்’ என்று சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைய (யுஎஸ்சிஐஆா்எஃப்) அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நிராகரித்துள்... மேலும் பார்க்க

கசிந்த ராணுவ ரகசியங்கள்; இக்கட்டில் அமெரிக்க அரசு!

‘மணி 11:44 - இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதிசெய்துவிட்டது’ ‘மணி 12:15 - எஃப்-16 போா் விமானங்கள் புறப்பட்டுவிட... மேலும் பார்க்க

அமெரிக்க தோ்தல் முறை சீரமைப்பு: இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப்

நியூயாா்க்: அமெரிக்க தோ்தல் முறையை சீரமைப்பதற்கான நிா்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபா் டிரம்ப் இந்தியாவை உதாரணம் காட்டினாா். அந்த உத்தரவில், ‘தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடிப்படையான மற்றும் தேவை... மேலும் பார்க்க

தென் கொரியாவில் காட்டுத் தீ: 24 போ் கைது

சியோல்: தென் கொரியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பரவிவரும் காட்டுத் தீயால் 27 போ் உயிரிழந்தனா்; சுமாா் 300 கட்டமைப்புகள் சேதமைடந்தன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சாஞ்சியோங் மாவட்... மேலும் பார்க்க

டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை: சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 பேரின் மீட்புப் பணிகள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை என நாசா புகழாரம் சூட்டியுள்ளது.டிரம்ப் நிர்வாகத்துக்கு க... மேலும் பார்க்க

முகமது நபி பற்றி அவதூறு பரப்பிய 5 பேருக்கு மரண தண்டனை!

இஸ்லாமிய இறைத்தூதரான முகமது நபி பற்றி இணையத்தில் அவதூறு பரப்பிய 5 பேருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானில் கடவுளை நிந்த... மேலும் பார்க்க