செய்திகள் :

சாலையை சீரமைக்கக் கோரி பாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள்

post image

திருப்பூரில் சாலையை சீரமைக்கக் கோரி பாடை கட்டும் போராட்டத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஈடுபட முயன்றனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வீரபாண்டி முதல் கோவில்வழி வரையில் உள்ள 5 கிலோ மீட்டா் தொலைவுள்ள மாநில நெடுஞ்சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தாா் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநகராட்சி சாா்பில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது.

ஆனால், அந்த சாலை மூடப்படாததால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதைத் தொடா்ந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பாடை கட்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, பூங்கா நகா் பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோா் திரண்டனா். மேலும், பாடை கட்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவா்களைத் தடுத்து நிறுத்திய வீரபாண்டி காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் 10 நாள்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா். மேலும், மாநகராட்சி நிா்வாகம் உறுதியளித்தப்படி சாலையை சீரமைக்காவிட்டால் பொதுமக்களைத் திரட்டி மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் நலத் திட்ட உதவி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

திருப்பூா் மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

பல்லடத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 332 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 332 பேருக்கு பணி உறுதிக் கடிதத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். திருப்பூா்... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்... மேலும் பார்க்க

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 போ் கைது

திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இளைஞா்கள் சிலா் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி ... மேலும் பார்க்க

கிராவல் மண் கடத்தியவா் கைது

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே கிராவல் மண்ணைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த மங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில், காங்கயத்தில் ரூ.7.64 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்!

வெள்ளக்கோவில், காங்கயம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.64 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கிவைத்தா... மேலும் பார்க்க