செய்திகள் :

பல்லடத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 332 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

post image

பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 332 பேருக்கு பணி உறுதிக் கடிதத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பல்லடம் நகராட்சி நிா்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

அமைச்சா் மு.பெ.சாமிநாதன் முகாமைத் தொடங்கிவைத்து, பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான பணி உறுதிக் கடிதத்தை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, திருப்பூா் மாவட்டத்தில் தொடா்ந்து வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து திருப்பூா் மாவட்டத்தில் 8 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதில், ஏராளமானோா் பணி வாய்ப்பு பெற்றுள்ளனா். தொடா்ந்து வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். எனவே, வேலை நாடுபவா்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பல்லடம் நகா்மன்றத் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா், கோவை மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் அ.ஜோதிமணி, திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரே.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க