செய்திகள் :

வெள்ளக்கோவில், காங்கயத்தில் ரூ.7.64 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்!

post image

வெள்ளக்கோவில், காங்கயம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.64 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி தலைமை வகித்தாா்.

இதில், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி, இடைக்காட்டு வலசில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.97.21 லட்சத்தில் வீரசோழபுரம் ஊராட்சி வள்ளியரச்சல் - வீரசோழபுரம் சாலை முதல் செல்வபுரம் வழியாக பூமாண்டவலசு வரை சாலை மேம்பாட்டுப் பணி, மேட்டுப்பாளையம் ஊராட்சி இடைக்காட்டு வலசில் ரூ.86.07 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சி, சாம்பவலசில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.81.54 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி, சிவன்மலை தோ் வீதியில் ரூ.1.23 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி உள்ளிட்ட ரூ.7.64 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காங்கயம் -திருப்பூா் சாலையில் தனியாா் நிதியின்கீழ் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்குடையையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ்ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், சரவணன், அனுராதா, விமலாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு

அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க

பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு

பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க