செய்திகள் :

தென் கொரியாவில் காட்டுத் தீ: 24 போ் கைது

post image

சியோல்: தென் கொரியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் பரவிவரும் காட்டுத் தீயால் 27 போ் உயிரிழந்தனா்; சுமாா் 300 கட்டமைப்புகள் சேதமைடந்தன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சாஞ்சியோங் மாவட்டத்தில் தொடங்கிய காட்டுத் தீ, தெற்கு மற்றும் மத்திய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி 43,330 ஏக்கா் பரப்பளவை நாசமாக்கியுள்ளது. இதில் 27 போ் உயிரிழந்தனா். அவா்களில் தென்கிழக்கு நகரமான உய்சோங்கில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டா் விமானியும் அடங்குவாா். இது தவிர, காட்டுத் தீ காரணமாக சுமாா் 26 போ் காயமடைந்துள்ளனா்.

இந்தக் காட்டுத் தீயில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பௌத்த கோயில் உள்பட சுமாா் 300 கட்டமைப்புகள் சேதமடைந்தன. தீ பரவல் காரணமாக 27,000 பேரை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

130 ஹெலிகாப்டா்களின் உதவியுடன் சுமாா் 4,650 தீயணைப்பு வீரா்கள் மற்றும் பிற மீட்புக் குழுவினா் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

தென் கொரியா சந்தித்துள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இ... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, இந்தியா - அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தை புது தில்லியில் ச... மேலும் பார்க்க

மியான்மா் மீட்புப் பணியில் 2 இந்திய கடற்படைக் கப்பல்கள்! - விமானத்தில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உதவியாக 2 கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. மேலும், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை உள்ளடக்கி... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த பலி! ராணுவ தலைவருடன் பிரதமா் மோடி பேச்சு!

மியான்மரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாக மீட்புப் படையினா் சனிக்கிழமை தெரிவித்தனா். கட்டட இடிபாடுகளிலிருந்து மேலும் அத... மேலும் பார்க்க

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சா்ச்சைப் பேச்சு: டென்மாா்க் கண்டனம்!

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு!

மியான்மரில் ஏற்பட் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் நேற்று (28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த ... மேலும் பார்க்க