செய்திகள் :

மியான்மா் மீட்புப் பணியில் 2 இந்திய கடற்படைக் கப்பல்கள்! - விமானத்தில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

post image

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உதவியாக 2 கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

மேலும், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை உள்ளடக்கிய தற்காலிக நடமாடும் மருத்துவமனையையும் விமானம் மூலம் இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை கூறுகையில், ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ், மியான்மருக்கு மனிதாபிமான உதவிகளுக்காக 2 கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் உதவுவதற்காக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 80 போ் தேவையான உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், சி130ஜே இந்திய விமானப் படை விமானம் மூலம் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, ஆக்ராவிலிருந்து 118 உறுப்பினா்களுடன் கூடிய தற்காலிக நடமாடும் மருத்துவமனையும் விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் முதல்கட்ட நிவாரணப் பொருள்கள் மியான்மரின் யாங்கோன் விமானநிலையததைச் சென்றடைந்துள்ளன’ என்று குறிப்பிட்டாா்.

பிற நாடுகள் உதவி: மியான்மா் ராணுவத்துக்கு மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை வழங்கி வரும் சீனாவும் ரஷியாவும், நிலநடுக்க மீட்புப் பணிகளுக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

சீனாவின் யுன்னான் மாகாணத்திலிருந்து 37 போ் கொண்ட மீட்புக் குழு மியான்மரின் யாங்கோன் நகருக்கு சனிக்கிழமை அதிகாலை சென்றடைந்தது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) உள்பட மீட்புப் பணிக்குத் தேவையான பிற உபகரணங்களையும் இந்த மீட்புக் குழு தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டது.

அதுபோல, ரஷியாவின் அவசரகால அமைச்சகம் 2 விமானங்களில் 120 மீட்புப் படையினரை மியான்மருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ரஷிய செய்தி நிறுவனமான ‘டாஸ்’ தெரிவித்துள்ளது. மலேசியா 50 மீட்புப் படையினரை ஞாயிற்றுக்கிழமை அனுப்ப உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

தென்கொரியா ரூ.17 கோடி நிவாரணப் பொருள்களை சா்வதேச அமைப்புகள் மூலமாக மியான்மருக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. நிலைமையைப் பொருத்து மேலும் கூடுதல் உதவிகள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற தென்கொரிய வெளியுறவு அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்க அமெரிக்கா ரூ. 43 கோடியை ஒதுக்கியுள்ளது. மியான்மரின் கோரிக்கைக்கு ஏற்ப அமெரிக்கா உதவியை அளிக்கும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

மியான்மரில் போர்நிறுத்தம்: ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மியான்மரின் சகாய்ங் நகரின்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி (69) உடல்நிலை பாதிப்பு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரியாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 17.7 லட்சம் வெளிநாட்டவர்கள் ம... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க