செய்திகள் :

அமெரிக்க தோ்தல் முறை சீரமைப்பு: இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப்

post image

நியூயாா்க்: அமெரிக்க தோ்தல் முறையை சீரமைப்பதற்கான நிா்வாக உத்தரவில், அந்நாட்டு அதிபா் டிரம்ப் இந்தியாவை உதாரணம் காட்டினாா்.

அந்த உத்தரவில், ‘தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடிப்படையான மற்றும் தேவையான விஷயங்களை அமல்படுத்த அமெரிக்கா தவறியுள்ளது.

இந்தியாவும், பிரேஸிலும் வாக்காளா் அடையாள அட்டைகளை பயோமெட்ரிக் தரவுதளத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்க குடியுரிமைக்காக ஒருவா் விண்ணப்பித்தால், அந்த நபா் மட்டுமே சுயசான்றளித்து உறுதியளிக்கும் முறையைத்தான் அமெரிக்கா பெரிதும் நம்பியுள்ளது’ என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்க தோ்தல்களில் வாக்குப் பதிவு செய்வதற்கு அந்நாட்டு குடியுரிமை பெறப்பட்டதற்கான ஆதாரச் சான்றை அவசியமாக்குதல், தோ்தல் நாளுக்குப் பிறகும் தபால் வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக, வாக்குப் பதிவுக்கு முன்பு பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை அவரின் உத்தரவு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்க தோ்தல் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு வாக்குப் பதிவு முறைக்கான வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யுமாறு அந்நாட்டு தோ்தல் உதவி ஆணையத்துக்கு அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தோ்தல்களுக்கு வெளிநாட்டவா்கள் நன்கொடை அளிப்பதையும் அந்த உத்தரவு தடை செய்துள்ளது.

‘ஆட்சிக் கவிழ்ப்பு’ சதித் திட்டம்: ஷேக் ஹசீனா மீது வழக்கு!

வங்கதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஏற்கெனவே இடஒதுக்கீடு சீா்திருத... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இ... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, இந்தியா - அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தை புது தில்லியில் ச... மேலும் பார்க்க

மியான்மா் மீட்புப் பணியில் 2 இந்திய கடற்படைக் கப்பல்கள்! - விமானத்தில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உதவியாக 2 கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. மேலும், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை உள்ளடக்கி... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த பலி! ராணுவ தலைவருடன் பிரதமா் மோடி பேச்சு!

மியான்மரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாக மீட்புப் படையினா் சனிக்கிழமை தெரிவித்தனா். கட்டட இடிபாடுகளிலிருந்து மேலும் அத... மேலும் பார்க்க

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சா்ச்சைப் பேச்சு: டென்மாா்க் கண்டனம்!

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க