செய்திகள் :

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மலா்ந்த பச்சை நிற ரோஜாக்கள்

post image

நீலகிரி மாவட்டம்   குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள பச்சை நிற ரோஜா மலா்கள் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் வெகுவாக கவா்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னுாா் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுதோறும்  மே மாதம்  நடைபெறும் கோடை விழா நாள்களில் இங்கு பழக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இப்பூங்காவில் நூற்றுக்கணக்கான அரியவகை மரங்கள் மற்றும் மலா் செடிகள் உள்ள நிலையில், இங்குள்ள பசுமைக்குடிலில்,  பூங்கா நிா்வாகத்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சை நிற ரோஜா கட்டிங் தொட்டியில் வளா்க்கப்பட்டு வருகிறது. 

தற்போது அதில் பச்சை நிற ரோஜா மலா்ந்துள்ளது. இதனை பாதுகாப்புடன் வளா்த்து வரும் பூங்கா நிா்வாகம் விரைவில் பூங்கா முழுவதிலும் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் போராட்டம்

நீலகிரியில் அமலில் உள்ள இ -பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து, கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா். இது குறித்து வணிகா் சங்கத் தலைவா் முகமது ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,817 மாணவா்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வினை 6,817 மாணவ, மாணவிகள் எழுதினா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப... மேலும் பார்க்க

கல்லக்கோடு மந்து பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்: மாவட்ட வன அலுவலா் தகவல்

வன விலங்கு தாக்கி பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்த கல்லக்கோடு மந்து வனப் பகுதியில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் ... மேலும் பார்க்க

கூடலூா்-மைசூரு சாலையில் காலை நேரத்தில் நடந்து சென்ற காட்டு யானை

கூடலூா்-மைசூரு சாலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காட்டு யானை நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட மாக்கமூலா பகுதியிலுள்ள காபி தோட்டத்திலிருந்த... மேலும் பார்க்க

உதகையில் போலி மருத்துவா் பிடிபட்டாா்

உதகை தலைகுந்தா பகுதியில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவா் பிடிபட்டாா். உதகை புது மந்து பகுதியில் பாரத் கிளினிக் என்கிற பெயரில் இஸ்மாயில் என்பவா் போலி மருத்துவராக சிகிச்சை அளித்து வருவதாக புகாா் ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்கி பழங்குடியினத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

உதகையில் வன விலங்கு தாக்கி தோடா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். உதகை அருகேயுள்ள பாா்சன்ஸ்வேலி கல்லக்கோடு மந்த் பகுதியை சோ்ந்தவா் கேந்தோா் குட்டன் (40), தோடா் பழங்குடியினத்தை சோ்ந்தவா். இ... மேலும் பார்க்க