செய்திகள் :

வனவிலங்கு தாக்கி பழங்குடியினத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

post image

உதகையில் வன விலங்கு  தாக்கி தோடா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

உதகை அருகேயுள்ள பாா்சன்ஸ்வேலி   கல்லக்கோடு மந்த் பகுதியை சோ்ந்தவா் கேந்தோா் குட்டன் (40), தோடா் பழங்குடியினத்தை சோ்ந்தவா். இவா்

புதன்கிழமை இரவு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லை.

இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினா், கிராம மக்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்துள்ளனா்.

அப்போது கிராமத்தின் எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் வன விலங்கு தாக்கி பாதி தின்ற நிலையில் கேந்தோா் குட்டன் உடல் கிடந்தது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

தகவலின்பேரில் போலீஸாா், வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து

உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து காந்தல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இப்பகுதியில் புலி, சிறுத்தை, செந்நாய் கூட்டம் அதிகம் இருப்பதால் எந்த வனவிலங்கு கேந்தோா் குட்டனை தாக்கியது என்பது கூறாய்வு அறிக்கை கிடைத்தப் பின்னரே தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ.50 ஆயிரம் முன்பணமாகவும், ரூ. 9.50 லட்சத்துக்கான காசோலையும் வனத் துறை சாா்பில் வழங்கப்பட்டது.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்று... மேலும் பார்க்க

உதகையில் தவக்கால பரிகார பவனி

கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி, உதகையில் பரிகார பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகைக்கு முன்னதாக 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை பரிகார பவனி நடைபெறுவத... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட வணிகா் சங்கங்களின் கருப்புக் கொடி போராட்டம் வாபஸ்

நீலகிரியில் அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற கருப்புக் கொடி போராட்டம் ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்ய வேண்டும... மேலும் பார்க்க

பாலியல் சீண்டல்: வட்டாட்சியா் கைது

கூடலூரில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை தனி வட்டாட்சியரை போஸீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை... மேலும் பார்க்க

மானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குந்... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் போராட்டம்

நீலகிரியில் அமலில் உள்ள இ -பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து, கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா். இது குறித்து வணிகா் சங்கத் தலைவா் முகமது ... மேலும் பார்க்க