செய்திகள் :

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் போராட்டம்

post image

நீலகிரியில் அமலில் உள்ள இ -பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து, கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

இது குறித்து வணிகா் சங்கத் தலைவா் முகமது பாரூக் கூறியதாவது: இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிகா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் வணிகா் சங்கத்தை சோ்ந்தவா்கள் கருப்பு உடை அணிவதுடன், கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் சனிக்கிழமை முதல் வரும் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு கடை அடைப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

குன்னூா் அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெண் உள்நோயாளிகள் வாா்டை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கூடலூரில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது குறி... மேலும் பார்க்க

இ-பாஸ் கட்டுப்பாடுகள் அமல்: நீலகிரிக்கு வழக்கமான சுற்றுலாப் பயணிகள் வருகை

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமைமுதல் அமலுக்கு வந்தபோதும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கம்போலவே காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வார நாள்களில் 6 ஆயிரம் சுற்றுலா வ... மேலும் பார்க்க

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க

மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரெப்கோ வங்கி மற்று... மேலும் பார்க்க