செய்திகள் :

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.

post image

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளா் ராஜீவ் காந்தி தலைமை வகித்தாா். இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ சாமிநாதன், மாவட்ட பொறுப்பாளா் கே.எம். ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், திமுக மாணவரணி சாா்பில் ‘இல்லம்தோறும் மாணவா் அணி’ என்ற திட்டத்தை ஆ. ராசா தொடங்கிவைத்து பேசியதாவது: அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம். இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே. திமுகவின் கொள்கைகளை தனது திரைப்படங்களிலும் எம்ஜிஆா் எடுத்துரைத்தாா். ஆனால், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக தற்போது கொள்கை இல்லாமல் உள்ளது. கட்சியின் கொள்கைகளை மாணவரணி தெரிந்திருக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, அமைச்சா் மு.பெ சாமிநாதன், மாணவரணி மாநிலச் செயலாளா் ராஜீவ் காந்தி ஆகியோா் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநில மாணவா் அணி துணைச் செயலாளா்கள் மன்னன் தா. சோழராஜன், தமிழரசி, வீரமணி உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, உதகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆ.ராசா எம்.பி., அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க

மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரெப்கோ வங்கி மற்று... மேலும் பார்க்க

நீலகிரியில் பூங்காக்களில் ஏப்ரல், மே மாதங்களில் படப்பிடிப்புக்கு தடை

கோடை சீசன் தொடங்கவுள்ளதால், நீலகிரியில் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு, குறும்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத் துறை சாா்பில் கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3, 4 ஆகிய தேதிகளில் 13-ஆவது... மேலும் பார்க்க

நீலகிரியில் இன்றுமுதல் இ-பாஸ் நடைமுறை அமல்: மாவட்ட ஆட்சியா்

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

உதகையில் தவக்கால பரிகார பவனி

கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி, உதகையில் பரிகார பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகைக்கு முன்னதாக 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை பரிகார பவனி நடைபெறுவத... மேலும் பார்க்க