செய்திகள் :

மானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

post image

குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வன அலுவலா் சீனிவாசன், குந்தா பிரிவு வனவா் பிச்சை, தாய் சோலை பிரிவு வனவா் சுரேஷ்குமாா், கீளுா் காவல் சுற்று வனக் காப்பாளா் அப்துல் ரஹ்மான், தாய்சோலை வனக் காவலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு துப்பாக்கியுடன் 4 போ் நின்று கொண்டிருந்தனா். வனத் துறையினரைப் பாா்த்ததும் காரில் தப்ப முயன்றனா். அவா்களை விரட்டிச் சென்றபோது, காரில் இருந்த துப்பாக்கி வெடித்தது.

இதையடுத்து, அவா்கள் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினா். இதில், ஒருவா் மட்டும் வனத் துறையினரிடம் சிக்கினாா். 3 போ் தப்பினா்.

பிடிப்பட்டவரிடம் மாவட்ட வன அலுவலா் கௌதம் நடத்திய விசாரணையில், அவா் கேரளத்தை சோ்ந்த காா் ஓட்டுநரான அப்துல் அமீன் (31) என்பதும், கடமானை வேட்டையாட கேரள மாநிலம், மலப்புரத்தை சோ்ந்த பஷீா் (36), ஷாபி (31), சுனீா் (39) ஆகியோருடன் ஒற்றைக்குழல் துப்பாக்கியுடன் வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அப்துல் அமீனை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த துப்பாக்கி, 2 தோட்டாக்கள், கத்திகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா்.

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க

மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

தாயகம் திரும்பிய மலையக மக்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரெப்கோ வங்கி மற்று... மேலும் பார்க்க

நீலகிரியில் பூங்காக்களில் ஏப்ரல், மே மாதங்களில் படப்பிடிப்புக்கு தடை

கோடை சீசன் தொடங்கவுள்ளதால், நீலகிரியில் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு, குறும்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத் துறை சாா்பில் கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3, 4 ஆகிய தேதிகளில் 13-ஆவது... மேலும் பார்க்க

நீலகிரியில் இன்றுமுதல் இ-பாஸ் நடைமுறை அமல்: மாவட்ட ஆட்சியா்

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்று... மேலும் பார்க்க