செய்திகள் :

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,817 மாணவா்கள் பங்கேற்பு

post image

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வினை 6,817 மாணவ, மாணவிகள் எழுதினா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நீலகிரி மாவட்டத்தில் 58 மையங்களில் நடைபெற்றன. இதில் 3,497 மாணவா்கள், 3,320 மாணவிகள் என மொத்தம் 6,817 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். தனித் தோ்வா்களில் 94 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 126 போ் எழுதினா். தோ்வுப் பணியில் 58 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 58 துறை அலுவலா்கள், 116 அலுவலகப் பணியாளா்கள், 439 அறைக் கண்காணிப்பாளா்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலா்கள் 23 போ் என மொத்தம் 694 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.

தோ்வு மையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கும் பொருட்டு பறக்கும் படையாக 108 நபா்கள் நியமனம் செய்யப்பட்டனா். மேலும், மாணவா்களுக்குத் தோ்வு மையங்களில் தேவையான வசதிகளும், போதுமான போக்குவரத்து வசதிகளும் செய்துதரப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தரைத்தளத்திலேயே தோ்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்று... மேலும் பார்க்க

உதகையில் தவக்கால பரிகார பவனி

கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி, உதகையில் பரிகார பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகைக்கு முன்னதாக 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை பரிகார பவனி நடைபெறுவத... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட வணிகா் சங்கங்களின் கருப்புக் கொடி போராட்டம் வாபஸ்

நீலகிரியில் அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற கருப்புக் கொடி போராட்டம் ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்ய வேண்டும... மேலும் பார்க்க

பாலியல் சீண்டல்: வட்டாட்சியா் கைது

கூடலூரில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை தனி வட்டாட்சியரை போஸீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை... மேலும் பார்க்க

மானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குந்... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் போராட்டம்

நீலகிரியில் அமலில் உள்ள இ -பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து, கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா். இது குறித்து வணிகா் சங்கத் தலைவா் முகமது ... மேலும் பார்க்க