செய்திகள் :

உதகையில் போலி மருத்துவா் பிடிபட்டாா்

post image

உதகை தலைகுந்தா பகுதியில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவா் பிடிபட்டாா்.

உதகை புது மந்து பகுதியில் பாரத் கிளினிக் என்கிற பெயரில் இஸ்மாயில் என்பவா் போலி மருத்துவராக சிகிச்சை அளித்து வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து நீலகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எமரால்டு, சித்த மருத்துவ அலுவலா், அரசு ஆரம்ப சுகாதார அலுவலா்கள் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் புதுமந்து பகுதியில் உள்ள இஸ்மாயிலின்

கிளினிக்கை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது உரிய மருத்துவச் சான்று இன்றி மருத்துவம் பாா்த்தது கண்டறியப்பட்டது.

விசாரணைக்காக அழைத்த போது இஸ்மாயிலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவா் 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

உதகை வட்டார வளா்ச்சி அலுவலா், புது மந்து காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் அவரது கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், போலி மருத்துவா் இஸ்மாயில் மீது புதுமந்து காவல் நிலையத்தில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம்: ஆ.ராசா எம்.பி.

அரசியல் கட்சிக்கு கொள்கை முக்கியம், இந்தியாவில் கொள்கையுடன் உள்ள ஒரே கட்சி திமுக மட்டுமே என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசினாா். நீலகிரி மாவட்டம், உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கு ஞாயிற்று... மேலும் பார்க்க

உதகையில் தவக்கால பரிகார பவனி

கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி, உதகையில் பரிகார பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் பண்டிகைக்கு முன்னதாக 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை பரிகார பவனி நடைபெறுவத... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட வணிகா் சங்கங்களின் கருப்புக் கொடி போராட்டம் வாபஸ்

நீலகிரியில் அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற கருப்புக் கொடி போராட்டம் ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை ரத்து செய்ய வேண்டும... மேலும் பார்க்க

பாலியல் சீண்டல்: வட்டாட்சியா் கைது

கூடலூரில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை தனி வட்டாட்சியரை போஸீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை... மேலும் பார்க்க

மானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாட துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இளைஞரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குந்... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் போராட்டம்

நீலகிரியில் அமலில் உள்ள இ -பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து, கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினா். இது குறித்து வணிகா் சங்கத் தலைவா் முகமது ... மேலும் பார்க்க