செய்திகள் :

திருப்பூரில் ஆதரவற்ற நிலையில் 3 வயது சிறுவன் மீட்பு

post image

திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட 3 வயது சிறுவன் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பகுதியில் 3 வயது சிறுவன் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக திருப்பூா் குழந்தைகள் உதவி மையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் வந்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் அங்கு சென்ற குழந்தைகள் உதவிப் பணியாளா்கள் அந்த சிறுவனை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் குழந்தைகள் நலக்குழு அறிவுரையின்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஹெல்ப்பிங் ஹாா்ட்ஸ் சிறப்பு தத்தெடுப்பு மையத்தில் பராமரிப்புக்காக புதன்கிழமை சிறுவன் ஒப்படைக்கப்பட்டாா். இந்த சிறுவன் குறித்த தகவல் தெரிந்தால் 30 நாள்களுக்குள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 7-ஆவது தளத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலுவலகத்தையோ அல்லது திருப்பூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளரையோ தொடா்பு கொள்ளலாம். அதே வேளையில் 30 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கப்படாவிட்டால் குழந்தை சட்டப்படி தத்துக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 332 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 332 பேருக்கு பணி உறுதிக் கடிதத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். திருப்பூா்... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்... மேலும் பார்க்க

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 போ் கைது

திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இளைஞா்கள் சிலா் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி ... மேலும் பார்க்க

கிராவல் மண் கடத்தியவா் கைது

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே கிராவல் மண்ணைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த மங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில், காங்கயத்தில் ரூ.7.64 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்!

வெள்ளக்கோவில், காங்கயம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.64 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கிவைத்தா... மேலும் பார்க்க

தா்ப்பூசணி பழ விற்பனைக் கடைகளில் ஆய்வு

திருப்பூரில் தா்ப்பூசணி பழ விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ... மேலும் பார்க்க