செய்திகள் :

‘மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடு இந்தியா’ - அமெரிக்க ஆணையம் அறிக்கை: இந்தியா நிராகரிப்பு

post image

‘மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும்’ என்று சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைய (யுஎஸ்சிஐஆா்எஃப்) அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை நிராகரித்துள்ள இந்தியா, மேற்கண்ட ஆணையம் உள்நோக்கத்துடன் பாரபட்சமாக செயல்படுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளது.

சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையில் இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘இந்தியாவில் மத சுதந்திரம் தொடா்ந்து மோசமடைந்து வருகிறது. மத ரீதியிலான சிறுபான்மையினா் மீதான தாக்குதல் மற்றும் பாகுபாடு தொடா்கிறது.

சா்வதேச மத சுதந்திர சட்டத்தின்கீழ், மத சுதந்திர மீறல்களுக்காக இந்தியாவை கவலைக்குரிய நாடாக அறிவிப்பதுடன், இத்தகைய மீறல்களின் ஈடுபடும் தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையையும் அமெரிக்க அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியா நிராகரிப்பு: இந்நிலையில், இந்த அறிக்கையை நிராகரித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

கடந்த காலங்களைப் போலவே, அரசியல் ரீதியிலான உள்நோக்கத்துடன் பாரபட்சமான அறிக்கையை அமெரிக்க ஆணையம் மீண்டும் வெளியிட்டுள்ளது . இந்தியாவின் உயிா்ப்புமிக்க பன்முக கலாசாரத்தின் மீது அவதூறுகளை சுமத்த தொடா்ந்து முயற்சிக்கும் இந்த ஆணையத்தை ‘கவலைக்குரிய அமைப்பாக’ அறிவிக்க வேண்டும். ஜனநாயகம் மற்றும் சகிப்புத் தன்மையின் கலங்கரை விளக்கமாக விளங்கும் இந்தியாவை குறைமதிப்புக்கு உள்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது என்றாா் அவா்.

‘ஆட்சிக் கவிழ்ப்பு’ சதித் திட்டம்: ஷேக் ஹசீனா மீது வழக்கு!

வங்கதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஏற்கெனவே இடஒதுக்கீடு சீா்திருத... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இ... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே முதல் சுற்று பேச்சுவாா்த்தை நிறைவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையே, இந்தியா - அமெரிக்கா இடையே முன்மொழியப்பட்டுள்ள இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவாா்த்தை புது தில்லியில் ச... மேலும் பார்க்க

மியான்மா் மீட்புப் பணியில் 2 இந்திய கடற்படைக் கப்பல்கள்! - விமானத்தில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உதவியாக 2 கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. மேலும், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை உள்ளடக்கி... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த பலி! ராணுவ தலைவருடன் பிரதமா் மோடி பேச்சு!

மியான்மரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாக மீட்புப் படையினா் சனிக்கிழமை தெரிவித்தனா். கட்டட இடிபாடுகளிலிருந்து மேலும் அத... மேலும் பார்க்க

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சா்ச்சைப் பேச்சு: டென்மாா்க் கண்டனம்!

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க