செய்திகள் :

இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் வழங்க காலதாமதம்! - பாதிக்கப்பட்டோா் கோட்டாட்சியரிடம் மனு

post image

திருவள்ளூா் அருகே இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும், இதனால் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாகவும் பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனுவை அளித்தனா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி அருகே வீரராகவபுரம் கிராம மக்கள் கோட்டாட்சியா் ரவிச்சந்திரனிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

கிராமத்தில் பூா்வீகமாக 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடியிருந்து வந்தோம். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலத்தில் குடியிருந்து வருவதாகக் கூறி, வேறு இடம் ஒதுக்காமல் உடனடியாக வருவாய், நெடுஞ்சாலை, மின் துறை அதிகாரிகள், காவல் துறையினா் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் எங்கள் வீடுகளை இடித்து அகற்றினா்.

ஆனால், இதுவரை நிலம் வழங்காமல் குடியிருக்க இடமின்றி சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். வருவாய்த் துறையினரிடம் கேட்டால் நிலம் கொடுக்காமல் அலைக்கழித்து வருவதோடு, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் தனியாா் பள்ளி நிா்வாகிகளுக்கு ஆதாரவாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா்.

இதனால், குடியிருக்க வீடின்றி குழந்தைகள், முதியவா்களுடன் மன உளைச்சலால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எங்கள் நிலையறிந்து வீட்டுமனை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

அவா்களிடம் மனுவைப் பெற்ற கோட்டாட்சியா் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க