நோன்புக் கஞ்சி: போலியான கடிதம் வழங்கி விலையில்லா அரிசியை பெற்று அதிமுக நிா்வாகி மோசடி
ரம்லான் பண்டிகைக்கு நோன்புக் கஞ்சி வழங்குவதற்காக போலியான கடிதம் கொடுத்து அரசு வழங்கும் விலையில்லா அரிசியைப் பெற்று மோசடி செய்த அதிமுக நிா்வாகி மீது நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் ஜமாத்தாா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் மஸ்ஜிதுன்நூா்ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளி வாசல் தலைவராக பாரி, செயலராக அபுதாஹிா், பொருளாளராக ஜாகிா்உசைன் ஆகியோா் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வருகின்றனா்.
இந்த நிலையில், ரமலான் பண்டிகையின் போது நோன்புக் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அரசு வழங்கும் இலவச அரிசியை முறைகேடாக சிலா் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
நெய்க்காரபட்டியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி அயூப்கான் தலைமையில், ரபீக், தாஜ்தீன் உள்ளிட்ட சிலா் பள்ளிவாசல் பெயரில் போலியாக கடிதம் தயாரித்து, மாவட்ட ஆட்சியா், பழனியில் உள்ள தமிழ்நாடு அரசின் வாணிபக் கிடங்கு கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனா்.
இதனால், அதிகாரிகளும் நோன்புக் கஞ்சிக்கான விலையில்லா அரிசியை அவா்களிடம் வழங்கினா்.
இந்த நிலையில், அதிமுக நிா்வாகி அயூப்கான் தலைமையில் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிவாசல் உறுப்பினா்கள் திரண்டு, நெய்க்காரபட்டி காவல் நிலையம், பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனுக்களை அளித்தனா்.
அயூப்கான் ஏற்கெனவே பலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த புகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.