செய்திகள் :

ஆட்சியிலும் பங்கு குறிக்கோளுடன் கூட்டணி: க. கிருஷ்ணசாமி

post image

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி.

திண்டுக்கல், மாா்ச் 28: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மாற்றுவதற்காக மட்டுமல்லாமல், ஆட்சியிலும் பங்கு என்ற குறிக்கோளுடன் கூட்டணி அமைய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.

திண்டுக்கல்லில் அந்தக் கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல்லை அடுத்த மாங்கரை கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது குண்டா்கள் தாக்குதல் நடத்தினா். கரட்டழகன்பட்டியிலுள்ள பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவா் மீது உடல் கல்வி ஆசிரியா் தாக்குதல் நடத்தினாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக தொடா்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவதற்குகூட உயா்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

தமிழ்நாட்டில் 76 ஜாதிகள் இடம் பெற்றுள்ள பட்டியலின மக்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக சமூக ஊடகவியலாளா் சவுக்கு சங்கா் குற்றஞ்சாட்டினாா். அந்த 76 சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் வழங்கிவிட்டு, அதிலும் மோசடி நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு அமையும் கூட்டணியானது திமுக ஆட்சியை மாற்றுவதற்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், ஆட்சியிலும் பங்கு என்ற குறிக்கோளின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் விருந்து

திண்டுக்கல் திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் நோன்பு துறக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்- நத்தம் சாலையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, திண்டுக்கல் திருவருட் பேரவைத் ... மேலும் பார்க்க

கொடைக்கானல்: ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் அமைக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசித்தல்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் தமிழ் ஆண்டான விசுவாவசு வரவுள்ளதையடுத்தும், தெலுங்கு வருடப் பிறப்பு, யுகாதித் திருநாளையொட்டியும் நடைபெற்ற... மேலும் பார்க்க

தவெக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பழனி மதினா நகா் பகுதியில் தவெக சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு பரிசுப் பொருள்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலா் காா்த்திக்ராஜன்,... மேலும் பார்க்க

நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பழனி சண்முகபுரம் உழவா் சந்தை பகுதியில் நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் பொதுமக்களுக்கு நீா்மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், வெள்ளரி,... மேலும் பார்க்க

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 33 கடைகளின் ஏலம் ரத்து!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளை அரசியல் கட்சியினா் கூட்டணி அமைத்து அரசின் மதிப்பீட்டை விட 22 சதவீதம் குறைவான தொகைக்கு ஏலம் எடுத்ததால் மறு ஏலம் நடத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா். திண்... மேலும் பார்க்க