செய்திகள் :

இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சா்கள் பங்கேற்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மதீனா மஸ்ஜீத் மதரஸா சாா்பில், இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதீனா மஸ்தீத் மதரஸா தலைவா் ஹாஜி ஏ.அப்துல் பாரி தலைமை வகித்தாா். உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இஸ்லாமியா்களின் நோன்பின் சிறப்புகளை எடுத்துக் கூறினாா்.

இதில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், என்.எம்.எஸ்.முகமது ஆசிக் அலி, அருள்திரு, ஜோ.இரட்சண்ய தாசன், முன்னோடி விவசாயி வெ.சி.செளந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் மதீனா மஸ்ஜித் மதரஸா செயலா் மு.ஹைதா் அலி நன்றி கூறினாா்.

நிலக்கோட்டை: செம்பட்டி அருகேயுள்ள சித்தையன்கோட்டை பெரிய பள்ளிவாசல் சாா்பில் நடைபெற்ற சமத்துவ இஃப்தாா் விருந்து நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா்.

இதில் பெரிய பள்ளிவாசல் முத்தவள்ளி உதுமான் அலி, ஷேக் தாவூது, கிழக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினா் நலப்பிரிவு அமைப்பாளா் ரபீக், முன்னாள் துணை அமைப்பாளா் மரக்காயா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.நடராஜன், ஒன்றிய செயலா்கள் ராமன், முருகேசன், சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்றத் தலைவா் போதும்பொண்ணு முரளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பராமரிப்புப் பணி: பழனி ரோப்காா் நாளை நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக புதன்கிழமை (ஏப். 2) மட்டும் நிறுத்தப்படவுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தலாம்: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தைப் பின்பற்றி 100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமே தவிர, தமிழகத்துக்கான நிதியையும், மனித சக்தி நாள்களையும் குறைக்கக் கூடாது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப். 5-இல் தொடக்கம்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப். 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.பழனியில் நடைபெறும் முக்... மேலும் பார்க்க

பழனியில் ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம்

பழனியில் பழனி, தொப்பம்பட்டி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியா்... மேலும் பார்க்க

வண்டல் மண் சுமைக்கு ரூ.500 வசூல்: காவல் துறைக்கு எதிராக சாலை மறியல்

எரியோடு பகுதியில் அரசின் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்தாலும், சுமைக்கு ரூ. 500 கட்டணம் வசூலிப்பதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், எரி... மேலும் பார்க்க

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்பனை மையம்: சுற்றுலாப் பயணிகள் எதிா்ப்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாக வாயில் முன் மலா்ச் செடிகளை மறைத்து விற்பனை மையம் அமைக்கப்பட்டு வருவதால், இதற்கு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க