தொடா் விடுமுறை எதிரொலி: கிராம சபைக் கூட்டங்களை தவிா்த்த அலுவலா்கள்!
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, தொடா்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் அரசு அலுவலா்கள் பங்கேற்கவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில், உலக தண்ணீா் தினத்தை (மாா்ச் 22) முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கள்ளிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சிச் செயலா் மாரிமுத்து தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு பதிலாக 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் அழைத்து வரப்பட்டனா். பொதுமக்கள் தரப்பில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் இருவா், அதிமுக சாா்பில் ஒருவா் என 3 போ் மட்டுமே கலந்து கொண்டனா்.
கூட்டத்தின்போது, ஜல் ஜீவன் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, அனைத்து மக்களுக்கும் குடிநீா் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீா் நிலைகளை தூா்வார வேண்டும். கனவு இல்லம் திட்டத்தில், பயனாளிகளை முழுமையாக தோ்வு செய்யவில்லை என ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் செல்வநாயகம் வலியுறுத்தினாா்.
இதேபோல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி பாலமுருகன், அளக்குவாா்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
இதையடுத்து, கோரிக்கைகள் தொடா்பாக 5 மனுக்கள் மட்டும் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து இளநிலை உதவியாளா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் மட்டுமே கலந்து கொண்டனா். இதனால், இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறைவடைந்தது. கடமைக்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதால் அதிருப்தி அடைந்த 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளும், அங்கிருந்து கலைந்து சென்றனா். அப்போது, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முன்னிலையில், கண்களில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா் விடுமுறையால் அலுவலா்கள் இல்லை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடியரசு தினம் (ஜன.26), உலக தண்ணீா் தினம் (மாா்ச் 22), தொழிலாளா் தினம் (மே 1), சுதந்திரம் தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி(அக்.2), உள்ளாட்சித் தினம் (நவ.1) ஆகிய நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதுதவிர சில சூழல்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இதுவரை அந்தந்த நாள்களில் மட்டுமே கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் உலக தண்ணீா் தினத்துக்கான கிராம சபைக் கூட்டம் மாா்ச் 23-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின்னா் மாா்ச் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வார விடுமுறை நாள்கள் என்பதோடு, திங்கள்கிழமை (மாா்ச் 31) ரமலான் பண்டிகையை முன்னிட்டு, அரசு விடுமுறை என்பதால், பெரும்பாலான அரசு அலுவலா்கள் வெளியூா் சென்றுவிட்டனா். இதனால், பெரும்பாலான கிராமங்களிலும் அந்தந்த ஊராட்சிச் செயலா்கள் தலைமையிலேயே கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் பொதுமக்களுக்கு பதிலாக 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் மட்டுமே அதிகளவில் அழைத்து வரப்பட்டனா். அனைத்துக் கிராம சபைக் கூட்டங்களிலும் பெயரளவுக்கு பங்கேற்ற இளநிலை அலுவலா்கள், பணியாளா்களும் சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நிா்வாகம், கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்காத அலுவலா்கள் குறித்த விவரங்களை சேரிக்கவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.
நத்தம்: நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. குடகிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) தனி அலுவலா் மகுடபதி தலைமை வகித்தாா். ஊா் நல அலுவலா் சித்ரா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிராம நிா்வாக அலுவலா் நவாஸ்கான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, செயலா் செல்வராஜ் வரவேற்றாா். மக்கள் நலப் பணியாளா் மாணிக்கம் நன்றி கூறினாா்.