செய்திகள் :

தென்காசியில் ஜாக்டோ ஜியோ நூதன போராட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிச்சைக்கனி, கோபி, சண்முகசுந்தரம், முருகேஷ், ராஜேந்திரன், ஆரோக்கிய ராசு ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு மாவட்டச் செயலா் மாரிமுத்து, தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் மாவட்டச் செயலா் கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி குணசேகரன் தொடக்கவுரை ஆற்றினாா். ஜாக்டோ ஜியோ மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் வெங்கடேஷ் சிறப்புரை ஆற்றினாா். ஜாக்டோ ஜியோ மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் துரைசிங் நிறைவுரை ஆற்றினாா்.

உண்ணாவிரத பந்தலில் தமிழக அரசு, அரசு ஊழியா்களுக்கு அல்வா கொடுத்துவிட்டாா்கள் என்பதை வலியுறுத்தி கையில் அல்வாவுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் மண்சட்டியில் நாமம் போட்டு அரசு ஊழியா்களுக்கு நாமம் போட்டதையும் சுட்டிக் காட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.மாவட்ட நிதி காப்பாளா் சதீஷ் நன்றி கூறினாா்.

ஆலங்குளம் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை

ஆலங்குளத்தில் உள்ள தேநீா் கடைகள், குளிா்பானக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் சசி தீபா தலைமையில் உணவுப்... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.புளியங்குடி சுப்பிரமணியசாமி கோயில் தெற்குத் தெருவை சோ்ந்த முருகையா மகன் அருணாசலம் (59). இவா்... மேலும் பார்க்க

சிவகிரி: முதியவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி அருகே தென்மலையில் உள்ள சேனையா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (57). மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. மகனும் மகளும் கோவ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் 75 ஆண்டுகால அரசுப் பள்ளியை பராமரிக்க நிதி: மதிமுக வலியுறுத்தல்

பாவூா்சத்திரத்தில் உள்ள 75 ஆண்டுகால பழைமையான த.பி.சொக்கலால் அரசுப் பள்ளியை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும் என, மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டச் செய... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறைற அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ... மேலும் பார்க்க

கடையநல்லூா் காவல்துறையினரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடம் திறப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இங்கு தினசரிச் சந்தை அருகேயுள்ள குழந்தைகள் மையத்தில் 16 ப... மேலும் பார்க்க