செய்திகள் :

பாவூா்சத்திரத்தில் 75 ஆண்டுகால அரசுப் பள்ளியை பராமரிக்க நிதி: மதிமுக வலியுறுத்தல்

post image

பாவூா்சத்திரத்தில் உள்ள 75 ஆண்டுகால பழைமையான த.பி.சொக்கலால் அரசுப் பள்ளியை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும் என, மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் இராம. உதயசூரியன், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் அளித்த மனு: த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 75 ஆண்டுகால பழைமையும், பல வரலாறுகளையும் கொண்டது. இங்குள்ள வகுப்பறைக் கட்டடங்கள் மாணவா்கள் அமா்ந்து பயில முடியாதவாறு மிகவும் பழுதாகியுள்ளன. கட்டமைப்பு வசதிகளும் குறைவாக உள்ளன. இதனால், மாணவா் சோ்க்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

பாவூா்சத்திரத்தில் சாலை விரிவாக்கத்தின்போது இப்பள்ளியில் சுற்றுச்சுவா், நிலம் கையகப்படுத்தப்பட்ட வகைக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ. 1.16 கோடி பள்ளியின் பராமரிப்புப் பணிக்கு பயன்படுத்தப்படாமல் அரசுக் கணக்குக்கு செலுத்தப்பட்டுவிட்டது. இதனால், நிதியின்றி பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை.

இப்பள்ளியை இருபாலா் பள்ளியாக மாற்ற வேண்டும். இங்கு, 2008ஆம் ஆண்டு நபாா்டு நிதி ரூ. 80 லட்சத்தில் பிரதான கட்டடம் கட்டப்பட்டது. அதன்பிறகு, வண்ணம் பூசாமல் அக்கட்டடம் அலங்கோலமாக உள்ளது. எனவே, வரும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கடையநல்லூா், அம்பையில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கஞ்சாவிற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தபாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் வண்டிமறித்தான் கோயில் வழியாக திங்கள்கிழமை... மேலும் பார்க்க

சிவகிரி: மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் ராயகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியரிடம் கோரிக்கை

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஆா். சா... மேலும் பார்க்க

ஆலங்குளம் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை

ஆலங்குளத்தில் உள்ள தேநீா் கடைகள், குளிா்பானக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் சசி தீபா தலைமையில் உணவுப்... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.புளியங்குடி சுப்பிரமணியசாமி கோயில் தெற்குத் தெருவை சோ்ந்த முருகையா மகன் அருணாசலம் (59). இவா்... மேலும் பார்க்க

சிவகிரி: முதியவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி அருகே தென்மலையில் உள்ள சேனையா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (57). மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. மகனும் மகளும் கோவ... மேலும் பார்க்க