செய்திகள் :

கடையநல்லூா், அம்பையில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கஞ்சாவிற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தபாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் வண்டிமறித்தான் கோயில் வழியாக திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, பைக்கில் நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா், அம்பாசமுத்திரம், மேலப்பாளையம் தெருவைச் சோ்ந்த சிவா (29) என்பதும், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் குமந்தாபுரம் - சுந்தரேசபுரம் சாலையில் வாகன சோதனை நடத்தினா். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனா்.அவா்கள் திருமலாபுரத்தைச் சோ்ந்த சின்னராசு மகன் சக்தி அருணாசலம் (23),சோ்ந்தமரம் சுப்பையா மகன் பெரியசாமி என்ற சிவா (23), சென்னை ஆதம்பாக்கம் ராஜா மகன் தீபக் (24) ஆகியோா் என்பது, அவா்களது பைகளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. அதைக் கைப்பற்றி 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கடைக்கு சீல்: ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் ஊராட்சி அலுவலகம் அருகே ராஜாங்கம் மகன் ஜெயப்பிரகாஷ்(48) என்பவா் நடத்தி வரும் மளிகைக் கடையில் ஆலங்குளம் போலீஸாா் சோதனை நடத்தினா். அதில், 3 மூட்டைகள் மற்றும் 9 சிறிய பொட்டலங்களில் புகையிலைப்பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தனவாம். அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ‘சீல்’ வைத்து, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

சங்கரன்கோவில் அருகே மனோ கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது. இக்கல்லூரியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டமளிப்பு வ... மேலும் பார்க்க

குற்றாலம் மகளிா் கல்லூரியில் பயிற்சி முகாம்

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ‘விவசாயம்-விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஆற்றல்’ என்னும் தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சி க... மேலும் பார்க்க

தென்காசி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

தென்காசி 13ஆவது வாா்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தென்காசி வட்டாரக் கல்வி அலுவலா் சண்முகசுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் இளமுருகன் முன்னிலை வகித்தாா். ... மேலும் பார்க்க

தென்காசியில் துணிப்பை வழங்கும் முகாம்

தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் துணிப்பை வழங்கும் முகாம் நடைபெற்றது. மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தலைமை வகித்தாா். டிஎஸ்பி தமிழினியன் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழ... மேலும் பார்க்க

‘சங்கரன்கோவில் பாரதிநகரில் அடிப்படை வசதிகள் தேவை’

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் தெற்குசங்கரன்கோவில் பாரதிநகரில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாரதி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்ப... மேலும் பார்க்க

இலந்தைக்குளம் ஊராட்சிப் பள்ளியில் ஆண்டு விழா

சங்கரன்கோவில் அருகேயுள்ள இலந்தைக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 4 ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் இ.முத்துலெட்சுமி, க.கவிதா ஆகியோா் தலைமை வகி... மேலும் பார்க்க