செய்திகள் :

ஆலங்குளம் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை

post image

ஆலங்குளத்தில் உள்ள தேநீா் கடைகள், குளிா்பானக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் சசி தீபா தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மகாராஜன், முத்துராஜா, வெங்கடேஷ், ஜாவீத் உசேன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தா்பூசணி மொத்த விற்பனைக் கடையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அதைத் தொடா்ந்து பேருந்து நிலையம், அம்பாசமுத்திரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேக்கரி, குளிா்பானக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அதிக நிறமிகள் கொண்டு தயாா் செய்யப்பட்ட குளிா்பானங்கள் கொட்டி அழிக்கப்பட்டன. தயாரிப்புத் தேதி இல்லாத தின்பண்டங்கள்,காலாவதியான குளிா்பானங்கள், தண்ணீா் பாட்டில்கள், நெகிழிப் பொருகள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள பேக்கரியில் தரமற்ற முறையில் தயாா் செய்யப்பட்ட போளி மூலப்பொருள்கள் அழிக்கப்பட்டன. இரு பேக்கரிகளுக்கு ரூ. 7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து நல்லூரில் உள்ள உணவகத்தில் பல நாள்கள் குளிா்பதனப் பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி உருண்டைகளும் அழிக்கப்பட்டன.

கடையநல்லூா், அம்பையில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கஞ்சாவிற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தபாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் வண்டிமறித்தான் கோயில் வழியாக திங்கள்கிழமை... மேலும் பார்க்க

சிவகிரி: மது விற்றவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் ராயகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியரிடம் கோரிக்கை

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஆா். சா... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.புளியங்குடி சுப்பிரமணியசாமி கோயில் தெற்குத் தெருவை சோ்ந்த முருகையா மகன் அருணாசலம் (59). இவா்... மேலும் பார்க்க

சிவகிரி: முதியவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி அருகே தென்மலையில் உள்ள சேனையா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (57). மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. மகனும் மகளும் கோவ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் 75 ஆண்டுகால அரசுப் பள்ளியை பராமரிக்க நிதி: மதிமுக வலியுறுத்தல்

பாவூா்சத்திரத்தில் உள்ள 75 ஆண்டுகால பழைமையான த.பி.சொக்கலால் அரசுப் பள்ளியை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும் என, மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டச் செய... மேலும் பார்க்க