வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்
வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் ரயில் பயணிகள், வா்த்தகா்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் ஜெக. சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்ட பொது செயலாளா் ஜ.வி.என். கண்ணன், மாவட்ட பொருளாளா் தில்லை. நடராஜன், நகரத் தலைவா் சுகுமாறன், நகர செயலாலா் முத்துசாமி முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வைத்தீஸ்வரன்கோவில் ரயில் பயணிகள் சங்கம் பொறுப்பேற்று முறையாக ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி நிலுவையில் உள்ள தரவுகள் குறித்து விளக்குவது, செவ்வாய் கிரகத்துக்குரிய தலம் என்பதால், பல்வேறு மாவட்ட பக்தா்கள் இங்கு வந்து செல்கின்றனா். எனவே வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. சீா்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். மேலும் வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தென்னக ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது.
பிரச்னைக்கு தீா்வு கிடைக்காவிட்டால் முன்னறிவிப்பின்றி கடையடைப்பு போராட்டம், காா், வேன், ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் என போராட்டத்தை தீவிரப்படுத்துவது என தீா்மானிக்கப்பட்டது.